பதிவு செய்த நாள்
28
ஜன
2017
12:01
பண்ருட்டி: திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில், அமாவாசையை முன்னிட்டு, மூலவர் பெருமாள், பிருந்தாவன கண்ணன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு நேற்று அருள்பாலித்தார். தை அமாவாசையை முன்னிட்டு, நேற்று காலை 6:00 மணிக்கு, சுப்ரபாதம், 7:00 மணிக்கு, நித்யபடி பூஜை நடந்தது. தொடர்ந்து, மூலவர் சரநாராயண பெருமாள், பழப்பந்தலில் பிருந்தாவன கண்ணனாக சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். உற்சவர் பெருமாள் தாயாருடன் சேர்த்தி உற்சவத்தில் திருக்கண்ணாடி அறையில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். மாலை 6:00 மணிக்கு, நித்யபடி பூஜையும், இரவு 9:30 மணிக்கு, ஏகாந்த சேவையும் நடந்தது.