புதுச்சத்திரம்: புதுச்சத்திரம் அடுத்த சேந்திரக்கிள்ளையில் கன்னித் திருவிழா நடந்தது. புதுச்சத்திரம் அடுத்த சேந்திரக்கிள்ளை சப்த கன்னிகள் கோவிலில் கன்னித் திருவிழா கடந்த 16 ம் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. தொடர்ந்து தினமும் இரவு சப்த கன்னிகள் மற்றும் காவல் தெய்வங்களான சாட்டைக்காரன், அக்னி, கரகம் ஆகிய தெய்வங்களுக்கும் அபிஷேக ஆராதனை நடந்தது. சிறப்பு விழாவான கன்னித்திருவிழா நேற்று நடந்தது. விழாவையொட்டி கன்னிகள் மற்றும் காவல் தெய்வங்கள் சிறப்பு அலங்காரத்தில் அலங்கரித்து பம்பை, உடுக்கை, ஆடலுடன் இப்பகுதியில் உள்ள கோவில் குளத்தில் கன்னித் திருவிழா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.