ராமனின் நின்ற கோலத்தைப் பாருங்கள் அவர் தர்மத்தை நிலைநாட்ட, கையில் ஏந்திய கோதண்டத்துடன் நேரே நிமிர்ந்து நிற்கிறார்!
ராதையை அணைத்த நிலையில் வளைந்து தோன்றுகிறார் கிருஷ்ணர்! எப்போதும் வளையாமல் நிமிர்ந்து நிற்பது தர்மம்! வளைந்து துவண்டு நிற்பது சிருங்காரம் என்ற இன்ப நிலை. தர்மத்தின் வழியில் நின்றால் அதைத் தொடர்ந்து இன்பம் வரும். முதலில் நிகழ்ந்த ராமாவதாரமும் அதை அடுத்து வந்த கிருஷ்ணாவதாரமும் இதைத்தான் உணர்த்துகின்றன.