பதிவு செய்த நாள்
18
பிப்
2017
11:02
திருப்பூர்: கோட்டை மாரியம்மன் கோவில் பூச்சாட்டு பொங்கல் விழாவை முன்னிட்டு, பூவோடு ஊர்வலத்துக்கு தேவையான பூச்சட்டிகளை தயார் செய்யும் பணி நடந்து வருகிறது. திருப்பூர் நகரில் உள்ள கோட்டை மாரியம்மன் கோவிலில், மாசிமாதம் நடக்கும் பூச்சாட்டு பொங்கல் விழா மிகவும் பிரசித்தி பெற்றது. பொங்கல் விழாவின் போது, பல்வேறு பகுதிகளில் இருந்து பூவோடு ஊர்வலம் விம ரிசையாக நடக்கும். நூற் றுக்கணக்கான பக்தர்கள் ஓரிடத்தில் கூடி, பூவோடு பூஜைகள் செய்து, பல்வேறு வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று, அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். இதேபோல், நகரின் மற்ற பகுதிகளில் உள்ள மாரியம்மன், மாகாளியம்மன் கோவில் பொங்கல் பண்டிகையின் போதும், பூவோடு ஊர்வலம் நடத்தப்படுகிறது. கோட்டை மாரியம்மன் கோவில் பொங்கல் விழா துவங்கியுள்ள நிலையில், பானை உற்பத்தியாளர்களுக்கு ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது. பூவோடு தயாரிப்புக்காக, மண் பானை தயாரித்து, அதனை பூவோடாக மாற்றி கொடுக்கும் பணி துவங்கியுள்ளது. இது குறித்து விற்பனையாளர்கள் கூறுகையில், "பூவோட்டுக்காகவே, பிரத் யேகமாக மண் பானைகள் செய்யப்படுகின்றன. மொத்தமாக, 100, 200 "பூவோடுகளுக்கு ஆர்டர் கிடைக்கும். பாணையை "லாவகமாக இரண்டாக உடைத்து, பூச்சட்டியாகவும், அதை தரையில் வைக்க "ஸ்டாண்ட் ஆகவும் மாற்றப்படுகிறது. பூவோடு தயாரிப்பதை புண்ணியமாக கருதுகிறோம், என்றனர்.