Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிவராத்திரியன்று பாட வேண்டிய எளிய ... கோட்டை மாரியம்மன் மாசித் திருவிழா: பூத்தமலர் பூ அலங்காரத்துடன் துவக்கம் கோட்டை மாரியம்மன் மாசித் திருவிழா: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மகா சிவராத்திரி: சிவன் கோவில்களில் குவியும் பக்தர்கள்!
எழுத்தின் அளவு:
மகா சிவராத்திரி: சிவன் கோவில்களில் குவியும் பக்தர்கள்!

பதிவு செய்த நாள்

24 பிப்
2017
10:02

இன்று மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு, அதிகாலை முதல் சிவன் கோயில்களில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். பிரதான கோவில்களில், அறநிலையத்துறை சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. ராத்திரி என்ற சொல், சகலமும் செயலற்று ஒடுங்குதல் என்று பொருள். உயிர்கள் செயலற்று, சிவபெருமானுக்குள் ஒடுங்கும் காலமே சிவராத்திரி. சிவராத்திரி என்பது நித்ய சிவராத்திரி; மாத சிவராத்திரி; பட்ச சிவராத்திரி; யோக சிவராத்திரி; மாக சிவராத்திரி என, ஐந்து வகைப்படும்.மாசி மாதத்து கிருஷ்ணபட்ச சதுர்த்தசி, அர்த்த ராத்திரியே மகா சிவராத்திரி. சிவராத்திரி இரவில் நான்கு கால வழிபாடு நடைபெறும். முதல் காலத்தில் சோமாஸ்கந்தர்; இரண்டாம் காலத்தில் தட்சிணாமூர்த்தி; மூன்றாம் காலத்தில் லிங்கோத்பவர்; நான்காம் காலத்தில் ரிஷபாரூடர் என்று அழைக்கப்பெறும் சந்திரசேகரர் வழிபாடு நடக்கும்.

இந்த நான்கு காலங்களிலும், கருவறையிலுள்ள மூலவருக்கு ஆகம முறைப்படி, அபிஷேகங்கள் செய்து, வழிபாடு நடக்கும். மூன்றாம் காலமான லிங்கோத்பவ காலம் என்பதால் கருவறைக்குப் பின் உள்ள லிங்கோத்பவருக்கு வழிபாடு நடக்கும். அப்போது, ஸ்ரீருத்ர பாராயணம்; ஸ்ரீ சிவ ஸகஸ்ர நாமங்கள் உச்சரித்தல்; தேவாரத்தில் உள்ள லிங்கபுராண திருக்குறுந்தொகை பாராயணம் செய்தல் ஆகியவை நடக்கும்.

கோடி புண்ணியம்: சிவராத்திரியின் நான்காம் காலத்தில் மிருத்யுஞ்சய மந்திரத்தை ஓதுவதால், உடல் பிணிகள் அனைத்தும் விலகும் என்பது ஐதீகம். சிவராத்திரி அன்று தான தருமங்கள் செய்வதால், கோடி புண்ணியம் கிடைக்கும். எனவே, சிவலிங்கம், ருத்திராட்சம், ரத்தினங்கள், நிவேதனப் பொருட்கள், அன்னம் போன்றவைகளைத் தானம் செய்யும் முறை வழக்கத்தில் உள்ளது. இன்று மகா சிவராத்திரி என்பதால் பிரதான கோவில்களில் பக்தர்கள் வழிபாட்டிற்காக அறநிலையத்துறை சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில், திருவொற்றியூர் திருவொற்றிசுவரர் கோவில், திருவான்மியூர் மருந்தீசுவரர் கோவில், கோயம்பேடு குற்றாலீசுவரர் கோவில், வேளச்சேரி தண்டீசுவரர் கோவில், மாடம்பாக்கம் தேனுபுரீசுவரர் உள்ளிட்ட பிரதான கோவில்களில் சிவராத்திரி சிறப்பு பூஜைக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  - நமது நிருபர் -

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; கோவையில் காவல் தெய்வம் கோனியம்மன் கோவிலில் தேரோட்டம் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தேரின் நடுவே ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை பட்டத்தரசி ராம் நகர் நாகநாதர் கோயிலில் நடைபெற்ற மண்டலாபிஷேக விழாவில் திரளான ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையத்தில் வைத்தியநாதர் தையல் நாயகி தாயார் மற்றும் 63 நாயன்மார்கள் சிலைகள் பிரதிஷ்டை ... மேலும்
 
temple news
சென்னை: ஆற்றுக்கால் பகவதி அம்மன் பொங்கல் விழாவை முன்னிட்டு, மீனம்பாக்கத்தில் 1,200 பெண்கள் ஒரே இடத்தில் ... மேலும்
 
temple news
 ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் காமாட்சி அம்மன் கோயில் ஏகாம்பரேஸ்வரர் சன்னதியில் மாசி மாத ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar