குளித்தலை: தோகைமலையில், மாசிப்பெருவிழா முன்னிட்டு, காமாட்சியம்மன் கோவிலில், தீமிதி விழா நடந்தது. குளித்தலை அடுத்த, தோகைமலை காமாட்சியம்மன், பத்ரகாளியம்மன், பதினெட்டாம்படி கருப்பசாமி கோவிலில், மாசிப்பெருவிழா முன்னிட்டு, கொடியேற்றம், பால்குடம், பால்காவடி, அக்னிச்சட்டி எடுத்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தன. தொடர்ந்து, கோவில் முன்பாக அமைக்கப்பட்ட பூக்குழியில் இறங்கி பக்தர்கள் தீமித்து நேர்த்திக்கடன் செய்தனர். இதில், சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஆயிரக் கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.