சங்ககிரி: சங்ககிரி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள, கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த, 14 அன்று பூச்சாட்டுதலுடன் துவங்கியது. தினமும் அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. நேற்று மாலை, பக்தர்கள் குஞ்சுமாரியம்மன் கோவில் அருகே அலகு குத்தி, அக்னிச் சட்டி ஏந்தி, காளி வேடம் அணிந்து கோட்டைமாரியம்மன் கோவில் வரை ஊர்வலமாக சென்றனர். பின்னர், கோவில் வளாகத்தில் பெண்கள் பொங்கல் வைத்து சுவாமிக்கு படைத்தனர். ஏராளமான பக்தர்கள் அம்மனை வழிபட்டனர்.