பங்குனி உத்திரத்திருநாள் உள்பட மூன்று நாட்கள் திருக்கல்யாண விழா நடக்கும் முருகன் கோயில் பெரம்பலூர் அருகிலுள்ள செட்டிகுளத்தில் உள்ளது. கோயில்களில் ஆண்டுக்கு ஒரு திருக்கல்யாணம் தான் நடத்தப்படும். இங்கு, பங்குனி உத்திர பிரம்மோற்ஸவத்தின் 5,7, 9ம் நாட்களில் திரு க்கல்யாணம் நடக்கிறது. இதில் கடைசி திருமணம் பங்குனி உத்திரத்தன்று நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. திருமணத்தடை உள்ளோர் ஏராளமாக இதில் பங்கேற்பர். விழா நாட்களில் சுவாமி கிரிவலம் செல்வார்.
இருப்பிடம்: பெரம்பலூர்- திருச்சி ரோட்டில் 15 கி.மீ., (திருச்சியில் இருந்து 44 கி.மீ.,) தூரத்தில் உள்ள ஆலத்தூர் சென்று, அங்கு பிரியும் ரோட்டில் 8 கி.மீ., சென்றால் செட்டிகுளத்தை அடையலாம். ஆலத்தூரில் இருந்து பஸ் குறைவு. ஆட்டோ உண்டு.