Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காஞ்சி ஏகாம்பரநாதர் கோவிலில் ... பாலா திரிபுரசுந்தரி கோவிலில் வசந்த கால மகா நவராத்திரி விழா பாலா திரிபுரசுந்தரி கோவிலில் வசந்த ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
40 அடி உயர முருகன் சிலையில் விரிசல்: பராமரிப்பு இல்லாததால் அவலம்
எழுத்தின் அளவு:
40 அடி உயர முருகன் சிலையில் விரிசல்: பராமரிப்பு இல்லாததால் அவலம்

பதிவு செய்த நாள்

31 மார்
2017
12:03

கோபி: பச்சமலையில், 40 அடி உயர செந்தில் ஆண்டவர் சிலையில், விரிசல் விழுந்துள்ளதால், பக்தர்கள் வேதனை அடைந்துள்ளனர். ஈரோடு மாவட்டம், கோபி தாலுகா, பச்சமலையில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் உள்ளது. ஆண்டுக்கு, 33 லட்சம் ரூபாய் வருவாய் பெரும் கோவில், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. கோவிலில், படிக்கட்டு வழியாக பக்தர்கள் வரும் வழியில், வலது புறத்தில் படி மண்டபம் அருகே, 40 அடி உயரத்தில் செந்தில் ஆண்டவர் சிலை கட்டப்பட்டுள்ளது. வடுகபாளையத்தை சேர்ந்த முருக பக்தர் ஒருவர் உபயத்தால், 2002 மார்ச், 6ல் திறப்பு விழா கண்டது. ஐந்து அடி உயரத்தில் மயிலும், தண்டம் மற்றும் வேலாயுதத்தை கையில் ஏந்தியபடி சிலை உள்ளது. திறப்பு விழாவுக்கு பின் சிலையை, இந்து சமய அறநிலையத்துறை முறையாக பராமரிக்கவில்லை. இதனால் சிலையின், கை, முதுகு, குன்று ஆகியவற்றில் விரிசல் விழுந்துள்ளது. அனல் பறக்கும் வெயிலில், ஏற்கனவே விழுந்த விரிசல், மேலும் அதிகரித்து வருகிறது. முறையாக பராமரிக்காவிடில், சிலை கட்டமைப்பு வலுவிழந்து, நிலைமை இன்னும் மோசமாக வாய்ப்புள்ளதாக, முருக பக்தர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: சிலை முழுக்க பெயிண்ட் மற்றும் பராமரிப்பு பணி செய்ய, குறைந்தபட்சம் மூன்று லட்சம் ரூபாய் செலவாகும். சிலையை சுற்றி சாரம் அமைக்க, 30 ஆயிரம் ரூபாய்க்கு மேல் செலவாகும். சம்பந்தப்பட்ட உபயதாரரிடம் தெரிவித்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடந்த, சித்திரை வசந்த உற்சவ பந்தக்கால் ... மேலும்
 
temple news
சேலம்: சேலம், கோட்டை பெரிய மாரியம்மன் கோவில் ராஜகோபுர நுழைவு வாயிலில் உபயதாரரால், 19 லட்சத்தில் ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: சித்திரை மாதம் வளர்பிறையில் வரக்கூடிய மூன்றாவது திதி அட்சய திருதியை ஆகும். ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71வது மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, சோற்றுத்துறை நாதர் கோவிலில் இன்று சுவாமி திருக்கல்யாணம் நடந்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar