பதிவு செய்த நாள்
31
மார்
2017
03:03
சேலம்: கோட்டை பெருமாள் கோவிலில், ஏப்., 5 முதல், ராமநவமி உற்சவம் நடக்கிறது. சேலம், கோட்டை அழகிரிநாதர் கோவிலில், ராமநவமி பண்டிகை, ஏப்., 5ல் துவங்குகிறது. அன்று முதல், ஏப்., 15 வரை, தினமும் உற்சவருக்கு சிறப்பு அலங்காரம் நடக்கிறது. ஏப்., 6, 7 மாலை, 6:00 முதல், 9:00 மணி வரை, மூலவருக்கு, திருப்பதி வெங்கடேஸ்வரா அலங்காரம், தாயாருக்கு பத்மாவதி அலங்காரம் செய்யப்படுகிறது. 14, 15ல், மூலவர் பெருமாள், தாயார், ஆஞ்சநேயர், உற்சவர் ராமர் ஆகியோருக்கு, முத்தங்கி அலங்காரம் சாத்துபடி செய்யப்படுகிறது ஏப்., 15 காலை, 10:30 மணிக்கு, ஆஞ்சநேயருக்கு அபிஷேக ஆராதனை, வடமாலை, வெள்ளிக்கவச அலங்காரம் செய்யப்படும். மாலை, 6:00 மணிக்கு, பஜனை நடக்கிறது. 7:00 மணிக்கு வெள்ளி கருட வாகனத்தில், சுந்தரராஜ பெருமாள் திருவீதி உலா நடக்கிறது.