Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
எல்லைப்பிடாரி அம்மன் கோவில் ... மாரியம்மன் கோவில் திருவிழா கோலாகலம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமநவமி முன்னிட்டு ராஜ அலங்காரத்தில் பெருமாள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 ஏப்
2017
03:04

சேலம்: கோட்டை பெருமாள், ராஜஅலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சேலம், கோட்டை அழகிரிநாதர் கோவிலில், ராமநவமி விழா, நேற்று துவங்கியது. அதையொட்டி, அதிகாலை, 6:00 மணிக்கு பூஜை நடந்தது. மாலை, 4:00 மணிக்கு, கோவிலில் உள்ள ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை நடந்தது. 6:00 மணிக்கு, அழகிரிநாதருக்கு, ராஜ அலங்காரம் சாத்துபடி செய்யப்பட்டு, ஸ்ரீதேவி, பூதேவியுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதேபோல் ராமர், லட்சுமணர், சீதாதேவி, ஆஞ்சநேயர் ஆகியோருக்கு, முத்தங்கி அலங்காரம் சாத்துபடி செய்யப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்தனர். வரும், 15 வரை சிறப்பு பூஜை நடக்கிறது. அதேபோல், அம்மாபேட்டை சவுந்திரராஜ பெருமாள், குமரகுரு சுப்பிரமணியர், சின்ன திருப்பதி வெங்கடாஜலபதி ஆகிய கோவில்களில், சிறப்பு பூஜை, அலங்கார ஆராதனை நடந்தது.

திருமணம்: தாரமங்கலம், கைலாசநாதர் கோவில் எதிரே உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில், கடந்த, 28 முதல், நேற்று வரை, ராமர், சீதைக்கு தினமும் பூஜை நடந்தது. நேற்று காலை, வரதராஜ பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. 9:30 மணிக்கு, ராமர் சீதை திருக்கல்யாணம் நடந்தது.

தங்கக்கவசம்: ஆத்தூர், கம்பர் பெருமாள் கோவில் தெருவில் உள்ள வீரஆஞ்சநேயர் கோவிலில், வீர ஆஞ்சநேயர் மற்றும் ராமர் பாதத்துக்கு, காலை, 8:00 மணிக்கு சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து பால், தயிர், இளநீர், தேன், பஞ்சாமிர்தம், சந்தனம் உள்பட பல்வேறு அபிஷேகம் நடந்தது. பின், வீர ஆஞ்சநேயருக்கு தங்கக்கவசம் சாத்தப்பட்டது. மேலும், வடை, வெற்றிலை, துளசி மாலைகள் அணிவித்து, மகா தீபாராதனை நடந்தது. அதில், ஏராளமான பக்தர்கள், வழிபாடு செய்தனர். அதேபோல், ஆத்தூர், கோட்டை வெங்கடேச பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவள்ளூர், வீரராகவர் கோவிலில் சித்திரை பிரம்மோற்சவம் மூன்றாம் நாளான இன்று கருட சேவை நடந்தது உற்சவர் ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி; திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயில் சைத்ரோத்ஸசவ விழாவை முன்னிட்டு இரண்டாம் ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி: சத்ய சாய் பாபாவின் நினைவு தினத்தையொட்டி, ஆராதனை மகோற்சவம் இன்று புட்டபர்த்தியில் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில் சித்திரை உத்திர பெருவிழா, கொடியேற்றத்துடன் இன்று ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலை பகுதியில் ஹெலிகாப்டர் தாழ்வாக பறந்தது பற்றி விசாரணை நடத்தி அறிக்கை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar