Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பெரியாயி அம்மன் கோவிலில் வரும் 25ல் ... சென்னிமலை முருகன் பங்குனித் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம் சென்னிமலை முருகன் பங்குனித் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேர்த்திருவிழா கோலாகலம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஏப்
2017
02:04

கோவை: பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரோட்டம், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடந்தது.

Default Image

Next News

மேலைச்சிதம்பரம் என்றழைக்கப்படும், பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர தேர்த்திருவிழா, மார்ச் 31ல் கொடியேற்றத்துடன்  துவங்கியது. ஏப்.,4 அன்று, அதி மூர்க்கம்மன் அரண்மனை திருவிளக்கு நிகழ்ச்சியும், இரவு, 8:00 மணிக்கு, வெள்ளி ரிஷப வாகன திருக்காட்சியும், அறுபத்து மூவர் திருக்காட்சியும் நடந்தன. நேற்று முன் தினம் அதி மூர்க்கம்மன்  திருத்தேரில் எழுந்தருளினார், தொடர்ந்து இரவு, 8:00 மணிக்கு, சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. வெள்ளை யானை மீது சுவாமி, எழுந்தருளி, திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். நேற்று காலை, 9:00 மணிக்கு, மலர்கள், பட்டாடை, அணிகலன்களால்  அலங்கரிக்கப்பட்ட, பஞ்ச மூர்த்திகள், திருத்தேரில் எழுந்தருளுவிக்கப்பட்டனர். தேரில் எழுந்தருளிய சுவாமி அம்பாள், சோமாஸ்கந்தர், விநாயகர், முருகர்  ஆகியோரை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். மாலை, 4:15 மணிக்கு, பேரூராதீனம் சாந்தலிங்க ராமசாமி அடிகளார், இளையபட்டம் மருதாசல அடிகளார், சிரவையாதீனம் குமரகுருபர சுவாமிகள், பிள்ளையார் பீடம் பொன்மணிவாசக சுவாமிகள் ஆகியோர் திருத்தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடந்தது.

கோவில் மைதானத்திலுள்ள தேர்நிலையிலிருந்து வடம் பிடித்து இழுக்கப்பட்ட தேர், கோவை – சிறுவாணி சாலை வழியாக, மேற்குரத வீதி, வடக்கு ரத வீதி வழியாக கோவில் தேர்நிலையை அடைந்தது. முதலில் பட்டீஸ்வரர் தேர், தொடர்ந்து அம்மன் தேர், விநாயகர், முருகர் தேர் ஆகியவை அணிவகுத்துச்சென்றன. செல்லும் வழியெங்கும் ‘ஓம் நமச்சிவாயா ’ என பக்தர்களின் கோஷம் விண்ணதிர முழங்கியது. இன்று இரவு, 8:00 மணிக்கு வேடுபரி உற்சவமும், குதிரை, கிளி வாகனங்களில் சுவாமி திருவீதி உலா வரும் நிகழ்வும் நடக்கிறது. நாளை  இரவு, 8:00 மணிக்கு, இந்திர விமான தெப்பத்திருவிழா நடைபெறுகிறது. ஏப்.,9 அன்று அதிகாலை, 3:30 மணிக்கு நடராஜ பெருமானுக்கு அபிஷேகமும்,  மகா தீபாராதனையும்,  பங்குனி உத்திர தரிசன காட்சியும் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; தைப்பூசத்தை முன்னிட்டு தமிழகம் எங்கும் முருகன் கோவில்களில் சாரை சாரையாக பக்தர்கள் குவிந்து ... மேலும்
 
temple news
பழநி; பழநி தைப்பூச திருவிழா விழாவை முன்னிட்டு பக்தர்கள் குவிந்தனர். நேற்று இரவு முதல் பாதயாத்திரையாக ... மேலும்
 
temple news
திருச்செந்தூர் :திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் இன்று தைப்பூசத் திருவிழா கோலாகலமாக ... மேலும்
 
temple news
மதுரை; தைப்பூச திருவிழாவை முன்னிட்டு திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் குவிந்தனர். சுமார் மூன்று மணி ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; தமிழ் கடவுள் என போற்றப்படும் முருகனின் அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடாக அமையப்பெற்றது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar