பதிவு செய்த நாள்
13
ஏப்
2017
01:04
கோவை : கோவை புலியகுளம் மாரியம்மன் கோவில் பங்குனி திருவிழாவில், அலகு குத்தி பறவை காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
புலியகுளம், மாரியம்மன் கோவிலில், பங்குனி திருவிழா, நேற்று துவங்கியது; அம்மன் திருவீதிவுலா நிகழ்வுடன், இன்று நிறைவடைகிறது. புலியகுளம், மாரியம்மன் கோவிலில், பங்குனித் திருவிழாவை முன்னிட்டு, கடந்த 15 நாட்களாக, சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடந்தன. நஞ்சுண்டாபுரம் நொய்யல் ஆற்றங்கரையில் உள்ள, கன்னிமார் கோவிலில், திருக்கல்யாண நிகழ்வோடு, தேர் ஊர்வலம் நேற்று துவங்கியது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பறவைக்காவடி, கரகம், பூவோடு எடுத்தல், தேர் இழுத்தல், பால்குடம் எடுத்தல் என, அம்மனுக்கு தங்களது நேர்த்திக்கடனை பக்தர்கள் செலுத்தினர். இன்று, காலை, 8:00 மணியளவில், அம்மன் திருவுலா நடந்தது.