Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருக்காமீஸ்வரர் கோவிலில் நாளை ... வனப்பாதுகாப்பில் சபரிமலை பக்தர்களின் ஒத்துழைப்பு:? கேரள வனத்துறை எதிர்பார்ப்பு! வனப்பாதுகாப்பில் சபரிமலை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலை பக்தர்களுக்கு இன்சூரன்ஸ் வசதி: பல இடங்களில் விரிவாக்க முடிவு!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 நவ
2011
11:11

பத்தனம்திட்டா : சபரிமலை பக்தர்கள் வசதிக்காக கொண்டு வரப்பட்டுள்ள இன்சூரன்ஸ் வசதி, மேலும் பல இடங்களுக்கு விரிவாக்கம் செய்யப்படும் என, திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு தலைவர் ராஜகோபாலன் நாயர் தெரிவித்தார். கேரளா பத்தனம்திட்டா மாவட்டம் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு, நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் கோடிக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். இவ்வாண்டுக்கான மண்டல பூஜை வரும், 16ம் தேதி துவங்க உள்ளது. சபரிமலை, பம்பை பகுதிகளில் பக்தர்களுக்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து, இங்குள்ள பிரஸ்கிளப்பில் திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு தலைவர் எம்.ராஜகோபாலன் நாயர் கூறியதாவது: சபரிமலை வரும் பக்தர்களின் வசதிக்காக, இன்சூரன்ஸ் திட்டம் தற்போது செயல்பாட்டில் உள்ளது. இத்திட்டம், எருமேலி-பம்பை வனத்தினூடே செல்லும் பாதை, குமளி, சத்திரம், புல்மேடு, பாஞ்சாலிமேடு, பருந்துப்பாறா பகுதிகளிலும் விரிவுப்படுத்தப் பட்டுள்ளது. இதற்காக பல்வேறு இன்சூரன்ஸ் நிறுவனங்களிடம் இருந்து டெண்டர்கள் கோரப்பட்டுள்ளன. சபரிமலையில், வியாபார நிறுவனங்கள், கட்டடங்கள் ஆகியவற்றை அப்புறப்படுத்தி, ஆறு ஏக்கர் பரப்பளவில் பக்தர்கள் ஓய்வெடுக்க வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. பம்பையில் மூன்று ஓட்டல்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதேபோல், சபரிமலை சன்னிதானத்திலும் ஓட்டல்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. பாண்டித்தாவளம் பகுதியில், 30 ஆயிரம் சதுரடி பரப்பில் பக்தர்கள் ஓய்வெடுக்க பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. பம்பையில் இருந்து சன்னிதானம் வரையில் ஒரு ஓட்டல், ஒரு இளநீர் கடை, சிற்றுண்டி சாலைகள் ஆகியவற்றிற்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சன்னிதானம், பம்பை ஆகிய இடங்களில் பல வியாபார நிறுவனங்களுக்கு அனுமதி வழங்காததன் மூலம் தேவஸ்வம் போர்டுக்கு இவ்வாண்டு, 20 சதவீதம் வருவாய் இழப்பு ஏற்படும். பம்பை-சபரிமலை பாதையில் ஒரு கோடியே பத்து லட்ச ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு வரும், கியூ காம்ப்ளக்ஸ் விரைவில் முடிவடையும் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு ராஜகோபாலன் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவராத்திரி விரதம் இருந்து ஈசனை வழிபட குடும்பத்தில் நன்மை பெருகும். சிவம் என்ற சொல்லுக்கு சுகம் என்று ... மேலும்
 
temple news
தூத்துக்குடி; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி திருவிழா 8ம் நாளான இன்று காலை வெள்ளி ... மேலும்
 
temple news
ஆர்.எஸ்.மங்கலம்; உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயில் சதுர்த்தி விழாவில், விநாயகர் சிம்ம வாகனத்தில் வீதி ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூர் ஸ்ரீஆதிபுரீஸ்வரர் தியாகராஜ சுவாமி வடிவுடையம்மன் கோவிலில் ஆதிபுரீஸ்வரர் ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி; திருப்புல்லாணி அருகே குத்துக்கல்வலசையில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar