பழநி: பழநி பெரியாவுடையார் கோயிலில் மாலை 4.30 மணிக்கு நந்திபகவான், மூலவருக்கும் பிரதோஷ வேளையில் சிறப்பு அபிஷேகம் நடந்தது. சிவன் பார்வதி ரிஷபவாகனத்தில் உட்பிரகாரத்தில் வலம் வந்தனர். இடும்பன்கோயிலில் ரிஷபவாகனத்தில் சுவாமி திருவுலா நடந்தது. மலைக்கோயில் கைலாசநாதர், சன்னதிவீதி வேளீஸ்வரர்கோயில், புதுநகர் சிவன்கோயில்களிலும் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தது.