பதிவு செய்த நாள்
29
ஏப்
2017
12:04
தண்டலம் : தண்டலம் கிராமத்தின் கிராம தேவதை பொன்னியம்மன் கோவில் தேரோட்டம், இந்த ஆண்டு நடைபெற வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர். செய்யூர் தாலுகா, தண்டலம் ஊராட்சியில், பிரசித்தி பெற்ற பொன்னியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலை, கிராமத்தின் காவல் தெய்வமாக மக்கள் கருதுகின்றனர். கோவில் திருவிழா ஆண்டு தோறும் ஆனி மாதம் அம்மனுக்கு காப்பு கட்டி, திருக்கல்யாணம் செய்து, ஆடு வெட்டி, தேர் இழுத்து திருவிழா நடைபெறுவது வழக்கம். இக்கோவிலுக்கு, 8 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அம்மனுக்கு தேர் செய்து ஆண்டு தோறும் தேர் இழுத்து திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், கடந்த ஆண்டு போதிய நிதி இல்லாததால் அம்மன் தேர் வீதி உலா வரவில்லை. எனவே, அம்மன் கோபமடைந்ததாகவும், இதனால், கிராமத்தில் அம்மை நோய், வறட்சி மற்றும் கால்நடைகள் இறப்பு உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெறுவதாகவும், மக்கள் கருதுகின்றனர். எனவே, இந்த ஆண்டு அம்மனுக்கு திருவிழா நடத்தி, தேரோட்டம் நடைபெற வேண்டும் என, கிராமவாசிகள் விருப்பம் தெரிவிக்கின்றனர்.