ஒருமுறை கைபர் பகுதியைச் சேர்ந்த ஒரு யூதப்பெண், நபிகள் நாயகத்திற்கு ஆட்டிறைச்சியை அன்பளிப்பாக வழங்கினாள். நாயகமும், அவருடன் சென்ற பிஷ்ர்இப்னுவும் அதைச் சாப்பிட்டனர். சாப்பிடும் போதே, நாயகம் தனது கையை உயர்த்தினார். இந்த உணவில் விஷம் கலந்திருக்கிறது எனச் சொன்னார். சாப்பிட்டுக்கொண்டிருந்த பிஷ்ர்இப்னு இறந்து விட்டார். அந்த பெண்ணை அழைத்த நாயகம், “ஏன் இப்படி செய்தாய்? எனக் கேட்டார். அதற்கு அந்த பெண், “நீர் இறைவனின் தூதர் என சொல்லி வருகிறீர். அது உண்மையாக இருந்தால் இந்த விஷ உணவு உம்மை ஏதும் செய்யாது என்று நான் நம்பினேன். அதன் காரணமாக இதை உமக்குத் தந்தேன், என்று சொன்னாள். இதன் பிறகு நாயகத்தின் தோழர்கள், அந்த பெண்ணைக் கொன்று விடலாமா? எனக் கேட்டனர். அதற்கு நாயகம் மறுத்து விட்டார். தனக்கு விஷம் வைத்துக் கொல்ல முயன்ற பெண்ணுக்கும் கருணை காட்டிய வள்ளலாகத் திகழ்ந்தார்.