Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மன்னீஸ்வரர் கோவிலில் புதிய ... கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவில் ரகசிய அறை உடைக்கும் பணி ஒத்திவைப்பு!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 நவ
2011
10:11

கும்மிடிப்பூண்டி : பல்லவ காலத்து சிவன் கோவில் ரகசிய அறையை உடைக்கும் பணி, போலீஸ் பற்றாக்குறை காரணமாக கடைசி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே உள்ள புதுகும்மிடிப்பூண்டி கிராமத்தில், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பல்லவ மன்னர்களால் கட்டப்பட்ட தெய்வநாயகி உடனுறை சந்திரசேகரேஸ்வரர் கோவில் உள்ளது. கோவிலில் வள்ளி சுப்பிரமணிய தெய்வானை சன்னிதிக்கும், அதனை அடுத்துள்ள தெய்வநாயகி அம்மன் சன்னிதிக்கும் இடையே, 6 அடி அகலம், 15 அடி நீளத்தில் முழுவதும் அடைக்கப்பட்ட ரகசிய அறை இருப்பதை தொல்லியல் துறையினர் கண்டறிந்தனர். நேற்று காலை ரகசிய அறையை உடைத்து, ஆய்வு நடத்த இந்து அறநிலையத் துறையினர் முடிவு செய்திருந்தனர். போலீஸ் பாதுகாப்பிற்கு கும்மிடிப்பூண்டி டி.எஸ்.பி., குமாரிடம் ஒரு வாரத்திற்கு முன்பே தெரிவித்திருந்தனர். திட்டமிட்டபடி, இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் பத்மநாபன் தலைமையில், மண்டல ஆய்வாளர் உதயகுமாரி, செயல் அலுவலர் லட்சுமிகாந்தன் ஆகியோர் கொண்ட குழு நேற்று காலை கோவிலுக்கு வந்தனர். ஆனால், பாதுகாப்பு பணிக்கு போலீஸ் ஒருவரும் வரவில்லை. "பந்தோபஸ்து பணிக்காக போலீசார் சென்றுள்ளதால் போதிய போலீசார் இல்லை என கும்மிடிப்பூண்டி டி.எஸ்.பி., குமார், கடைசி நேரத்தில் தெரிவித்தார். இதையடுத்து ரகசிய அறையை உடைக்கும் பணி வருகிற, 16ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. ரகசிய அறையில் உள்ளவை குறித்து, ஆய்வு மேற்கொள்ள வந்த அறநிலையத்துறையினர், அறையில் உள்ளவை குறித்து தெரிந்துகொள்ள ஆர்வமாக கூடியிருந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருமலை திருப்பதி பிரம்மோற்சவ விழாவின் 9ம் நாளான இன்று தீர்த்தவாரி நடைபெற்றது.திருப்பதி ... மேலும்
 
temple news
மதுரை; மதுரையில் தினமலர் மாணவர் பதிப்பு, மஹன்யாஸ் இணைந்து இரண்டரை வயது முதல் மூன்றரை வயது ... மேலும்
 
temple news
வடவள்ளி; மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில், விஜயதசமி விழாவையொட்டி, அம்பு சேவை நடந்தது.முருகனின் ... மேலும்
 
temple news
தினமலர் நாளிதழ் சார்பில், மழலைகளின் பிஞ்சு விரல் பிடித்து கல்வி கோவிலுக்குள் அடியெடுத்து வைக்கும், ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்; ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் வடபத்ரசாயி கோயிலில் புரட்டாசி பிரமோற்ஸவம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar