பதிவு செய்த நாள்
04
மே
2017
11:05
திருப்பூர்: திருப்பூர், பி.என்.,ரோடு திருமலை நகர், மாரியம்மன் கோவில் பூச்சாட்டு விழாவையொட்டி, கறிவேப்பிலை பந்தலில் வீற்றிருந்து, அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். பூச்சாட்டு பொங்கல் விழா, கடந்த, 29ல் பொட்டுசாமி பொங்கல், பொரிமாத்து நிகழ்ச்சியுடன் துவங்கியது. கடந்த, 1ம் தேதி இரவு, கம்பம் நட்டு, பூவோடு வைத்து பூஜை நடந்தது. நேற்று முன்தினம், பட்டு படைக்கலம் எடுத்து வந்து, அம்மன் அழைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று காலை, 6:00 மணிக்கு, மாவிளக்கு எடுத்து வந்து பொங்கல் படைக்கப்பட்டது. மதியம், 12:00 மணிக்கு உற்சவ மகா பூஜையும்; இரவு, 9:00 மணிக்கு, கம்பம் தயாஸ்தானம் அடைந்தது. இன்று காலை, 10:00 மணிக்கு, தீர்த்த கலச ஊர்வலமும், மாரியம்மன் திருவீதியுலாவும் நடைபெற உள்ளது. மதியம், 12:00 மணிக்கு, மஞ்சள் நீராட்டு விழாவும், சிறப்பு பூஜையும் நடக்கிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மாரியம்மன் கோவில் கருவறை, முன் பண்டத்தில் கறிவேப்பிலை பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. சிவன் மற்றும் பார்வதியுடன், மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.