பதிவு செய்த நாள்
10
மே
2017
01:05
திருவண்ணாமலை: சித்ரா பௌர்ணமியை யொட்டி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஸ்வாமி தரிசனம் செய்ய சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் கோவில் வெளிபுறத்திலிருந்து வடக்கு கோபுர பகுதியில் தொடங்கி ராஜகோபுரம் பகுதி வழியாக செல்ல நீண்ட வரிசையில் பலமணி நேரமாக காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலையில், மாதம்தோறும் பவுர்ணமி தினத்தில் பக்தர்கள் கிரிவலம் சென்று, அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனை தரிசித்து செல்வர். இந்த மாதம் சித்ரா பவுர்ணமி என்பதால், வழக்கத்தைவிட கூடுதலாக பக்தர்கள் வந்தனர். இன்று, ( மே 10) அதிகாலை, 12:09 மணிக்கு பவுர்ணமி துவங்கி, நாளை அதிகாலை, 3:04 மணி வரை உள்ளது. இந்நிலையில் நேற்று மாலை, 6:00 மணி முதலே பக்தர்கள் கிரிவலம் செல்ல துவங்கினர். லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.