Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிவகாசி பத்ரகாளியம்மன் கோயிலில் ... மதுரகாளியம்மன் தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு மதுரகாளியம்மன் தேரோட்டம்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
1,000 போலீசார் பாதுகாப்புடன் நாகூரில் பூச்சொரிதல் ஊர்வலம்
எழுத்தின் அளவு:
1,000 போலீசார் பாதுகாப்புடன் நாகூரில் பூச்சொரிதல் ஊர்வலம்

பதிவு செய்த நாள்

19 மே
2017
11:05

நாகப்பட்டினம்: நாகூர் சீராளம்மன் கோவில் திருவிழாவில், பூச்சொரிதல் ஊர்வலத்திற்கு, ஒரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்ததால், பதற்றம் ஏற்பட்டது. இதனால், ௧,௦௦௦ போலீசார் பாதுகாப்புடன், ஊர்வலம் நடந்தது. நாகை அடுத்த நாகூர், பட்டினச்சேரி மீனவ கிராமத்தில், பழமையான சீராளம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் திருவிழாவின் துவக்க நிகழ்ச்சியாக, நாகூர், நாகநாதர் கோவிலில் இருந்து பெண்கள், பூத்தட்டுகளை ஊர்வலமாக எடுத்து சென்று, சீராளம்மன் கோவிலை அடைந்ததும், பூச்சொரிதல் வைபவம் நடைபெறும்.

கடந்த ஆண்டு, பூச்சொரிதல் ஊர்வலம் செல்லும் பாதையில், ஒரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்ததால், பதற்றம் ஏற்பட்டது. போலீசார் தலையீட்டிற்கு பின், ஊர்வலம் நடந்தது. இந்த ஆண்டும், பூச்சொரிதல் ஊர்வலத்திற்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து, கலெக்டர் மற்றும், எஸ்.பி., தலைமை யில், அமைதி பேச்சு நடந்தது. இதில், அமைதியான முறையில், ஊர்வலம் நடத்த உத்தரவிடப்பட்டது. எனினும், அப்பகுதியில் பதற்றம் நிலவியதால், அசம்பாவிதத்தை தடுக்கும் வகையில், திருச்சி, ஐ.ஜி., வரதராஜு, டி.ஐ.ஜி., செந்தில்குமார் தலைமையில், ௦ போலீசார், ஊர்வலம் செல்லும் சாலையில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் மாலை, 5:00 மணிக்கு நாகூர், நாகநாதர் கோவிலில் இருந்து, பட்டினச்சேரி கிராம பஞ்சாயத்தார் தலைமையில், 2,500 பெண்கள், பூத்தட்டுகளை சுமந்து, ஊர்வலமாக சென்றனர். இரவு, 7:00 மணிக்கு ஊர்வலம், கோவிலை அடைந்ததும், பூச்சொரிதல் வைபவம் நடந்தது. நாகூரில் தொடர்ந்து பதற்றம் நிலவுவதால், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இந்தாண்டுக்கான முழு சந்திர கிரகணம் இன்று நிகழ உள்ளது. இந்திய நேரப்படி, மாலை 3.20 முதல், மாலை 6.47 மணி வரை ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; பூம்புகார் காவிரி சங்கமத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது.. சந்திரசேகரர், திவ்ய தேச ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், -  இந்தாண்டிற்கான முழு சந்திர கிரகணம் இன்று 3.20 மணிக்கு தொடங்கி மாலை 6.48 மணிக்கு முடிவடையும். ... மேலும்
 
temple news
கோவை :கோவையின் காவல் தெய்வம் என்று அழைக்கப்படும் கோனியம்மன் கோவிலில் மாசி மாச உற்சவம் நடைபெற்று ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மாசி மகத்தை முன்னிட்டு திருமங்கை   108 திவ்ய தேசங்களில் 26-வது தலமானதும், பஞ்சரங்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar