பதிவு செய்த நாள்
20
மே
2017
12:05
அவலுார்பேட்டை: மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் ரூ.42 லட்சத்து 70 ஆயிரத்து 953 உண்டியல் பணம் வசூல் ஆனது. மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில், சித்திரை மாத அமாவாசை முடிந்து, காணிக்கை உண்டியல்கள் திறக்கப்பட்டன. இந்து சமய அறநிலைய துறை உதவி ஆணையாளர்கள் பிரகாஷ், மோகனசுந்தரம், அறங்காவலர் குழு தலைவர் ஏழுமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோவில் வளாகத்தில், உண்டியல் பணம் எண்ணும் பணி நடந்தது. இதில், ரூ.42 லட்சத்து 70 ஆயிரத்து 953 பணமும், 405 கிராம தங்க நகைகள், 806 கிராம் வெள்ளி பொருட்கள் உள்ளிட்டவற்றை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். இதில் அறங்காவலர்கள் ரமேஷ், கணேசன், செல்வம், சரவணன், மணி, ஆய்வாளர் அன்பழகன், கண்காணிப்பாளர் வேலு கலந்துக் கொண்டனர்.