Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அங்காளம்மன் கோவில்களில் ஊஞ்சல் ... பெரியாயி கோவிலில் ஊஞ்சல் சேவை பெரியாயி கோவிலில் ஊஞ்சல் சேவை
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழமையான தீர்த்தங்கரர் சிற்பம்: பண்ருட்டி அருகே கண்டுபிடிப்பு
எழுத்தின் அளவு:
பழமையான தீர்த்தங்கரர் சிற்பம்: பண்ருட்டி அருகே கண்டுபிடிப்பு

பதிவு செய்த நாள்

27 மே
2017
11:05

பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த கீழ்காவனுார் கிராமத்தில், கி.பி., 10ம் நுாற்றாண்டை சேர்ந்த, சமண தீர்த்தங்கரர் சிற்பம் கண்டெடுக்கப்பட்டது. கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த கீழ்காவனுார் கிராமத்தில், தென்பெண்ணையாற்றின் தென்கரையில், அய்யனார் கோவிலில்  சமண தீர்த்தங்கரர் சிற்பம் கண்டெடுக்கப்பட்டது.

இதுகுறித்து,  களஆய்வு செய்த, வரலாற்று ஆய்வாளர் உளுந்தாம்பட்டு இம்மானுவேல் கூறியதாவது: தற்போது கண்டெடுக்கப்பட் டுள்ள சமண தீர்த்தங்கரரின் சிற்பத்தை, அய்யனார் என வழிபட்டுவந்துள்ளனர். இந்த தீர்த்தங்கரர் சிற்பம் 34 செ.மீ., உயரமும், 25 செ.மீ., அகலமும் கொண்டது. கி.பி., 10ம் நுாற்றாண்டைச் சேர்ந்தது. தீர்த்தங்கரர்கள் 24 பேரில், இச்சிற்பம் எந்த தீர்த்தங்கரர் என, கண்டுபிடிக்க குறியீடுகள் ஏதும் காணவில்லை. இடது தோளும், மூக்கும் சிதைந்துள்ளது. தலையில் முக்குடை அலங்கரிக்கிறது. கடலுார் மாவட்டத்தில் சமணர் வாழ்விடங்கள், அடையாளங்கள், கோவில் இருந்ததற்கான தடயங்களும் நிறைய உள்ளன. கடலுார், திருவதிகை, நெல்லிக்குப்பம், கீழ்அருங்குணம், வானமாதேவி, திட்டக்குடி, கொங்கராயனுார், கணிசப்பாக்கம் ஆகிய ஊர்களிலும் சமண தீர்த்தங்கரர் சிற்பங்களை ஏற்கனவே வரலாற்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

கல்வெட்டு ஆய்வாளர் பண்ருட்டி தமிழரசன், விழுப்புரம் ஆய்வாளர் வீரராகவன் ஆகியோர், சில ஆண்டுகளுக்கு முன், கணிசப்பாக்கம் கிராமத்தில் கண்டெடுத்த தீர்த்தங்கரர் சிற்பத்தில், கல்வெட்டு இடம் பெற்றிருந்ததையும்  கண்டுபிடித்துள்ளனர். கல்வெட்டில், ‘படுவன் பொற்காளி’ என்பவரின் தமக்கை செனக்கத்தி என்பவள், இவ்வூரில் இருந்த தீர்த்தங்கரர் கோவிலுக்கு, ஆண்டுதோறும் நடந்து வந்த திருவிழா ஒன்றுக்கு வழங்கியுள்ள பொற்காசு காணிக்கையை பற்றி கூறப்பட்டுள்ளது. அதுபோல், கீழ்காவனுார் பகுதியிலும் தீர்த்தங்கரர் கோவில் இருந்திருக்கலாம் என, ஆய்வில் தெரிய வருகிறது. இவ்வாறு, வரலாற்று ஆய்வாளர் இம்மானுவேல் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: ஏகாம்பரநாதர் கோயில் கும்பாபிஷேகம் கடந்த டிசம்பர் மாதம் விமர்சியாக நடைபெற்றது. நீண்ட ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் தைப்பூசம் ஜன.26ல் பெரியநாயகி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் துவங்க ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருநாங்கூரில் 11 தங்க கருட சேவை உற்சவம்- 11 பெருமாளும் ஒரே இடத்தில் எழுந்தருள பக்தர்கள் ... மேலும்
 
temple news
புதுக்கோட்டை; ஆலங்குடியில் இரண்டாவது குரு ஸ்தலமாக திகழும்  தர்மசம்வர்தினி அம்பாள் சமேத ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கரையில் அமாவாசை நாளில் போலி புரோகிதர்கள் உலா வருவதால், பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar