பதிவு செய்த நாள்
03
ஜூன்
2017
02:06
காஞ்சிபுரம்: பராமரிப்பின்றி துார்ந்து போன, மேட்டுத்தெரு நகரீஸ்வரர் கோவில் குளம் மற்றும் மங்கள தீர்த்த குளம், 13 லட்சம் ரூபாய் செலவில், சீரமைக்கப்பட்டு வருகின்றன.காஞ்சிபுரம், மேட்டுத்தெருவில் அமைந்துள்ள நகரீஸ்வரர் கோவில் குளம், 2002ல், சுற்றுச்சுவர் ஏற்படுத்தி, சீரமைக்கப்பட்டது. அதன்பின் பராமரிப்பில்லாமல் போனதால், குளம் துார்ந்து, சீரழிந்து காணப்பட்டது. மேலும், 2015 கன மழைக்கு, குளத்தின் சுற்றுச்சுவர் சேதமடைந்தது. முட்புதர்கள் நிறைந்து காணப்பட்டது. இதையடுத்து, கோவில் நிர்வாகம், 4.5 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி, குளம் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டுள்ளது. குளத்தில் தேங்கி கிடக்கும் மண்ணை எடுக்கும் பணியும் நடக்க இருக்கிறது.அதே போல், பெரிய காஞ்சிபுரம் மங்கள தீர்த்த குளமும், சுற்றுலா துறை நிதி, 11.85 லட்சம் ரூபாய் செலவில், சீரமைக்கப்படுகிறது. கனத்த மழையின் போது இடிந்து விழுந்த சுற்றுச்சுவர் மற்றும் குளத்தின் நான்கு புறமும் பொதுமக்கள் நடப்பதற்கேற்ற பாதை வசதியும் அமைக்கப்படுகிறது.