சுயநலத்துடன் காரியமாற்றுபவர்களை இறைவன் கை விட்டு விடுவான்.
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஜூன் 2017 05:06
எவரேனும் முக்கியமான ஒரு பணியில் ஈடுபடும் முன்பு, ஒன்றுக்கு நான்கு தடவை ஆலோசனை செய்கிறாரோ அவர் துன்பத்தில் சிக்க மாட்டார். சிலர் யோசிக்காமல் சில விஷயங்களில் கால் வைத்து விட்டு அவஸ்தைப்படுவார்கள். வீட்டின் வரவு, செலவைக் கவனிப்பவர்கள் அவஸ்தைப் படாமல் இருக்க வேண்டுமானால், வரவுக்கேற்ப செலவழிக்க வேண்டும். இப்படி இருந்தால் சேமிப்பு ஏற்பட்டு, எதிர்காலத்தில் வரும் சிரமங்கள் தவிர்க்கப்படும். எவர் ஒருவர் நடுநிலையான போக்கை மேற்கொள்கிறாரோ, அவர் வறுமையின் பிடியில் சிக்கி அவதிப்படமாட்டார். இரண்டு குடும்பங்களுக்கிடையே அல்லது தம்பதிகளுக்கிடையே பிரச்னை என்றால், ஒரு சார்பாக பேசுபவர் இறைவனின் தண்டனையிலிருந்து தப்ப முடியாது. ஏனெனில், அவர் ஒரு தரப்பாரின் சாபத்தைப் பெறுகிறார். இவர்களுக்கு வறுமை என்னும் கொடிய தண்டனை இறைவனால் தரப்படும்.