Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வறண்ட குன்றத்து தெப்பம், லட்சுமி ... கடலுார் பாடலீஸ்வரர் கோவிலில் பஞ்சமூர்த்திகள் வீதியுலா கடலுார் பாடலீஸ்வரர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அம்மன் கோயில்களில் கூழ் ஊற்ற தானியம் வழங்க வேண்டும்
எழுத்தின் அளவு:
அம்மன் கோயில்களில் கூழ் ஊற்ற தானியம் வழங்க வேண்டும்

பதிவு செய்த நாள்

06 ஜூன்
2017
11:06

தேனி:ஆடி மாதம் அம்மன் கோயில்களில் பக்தர்களுக்கு கூழ் ஊற்றுவதற்கு அரசு தானியத்தை இலவசமாக வழங்க கோரி இந்து எழுச்சி முன்னணியினர் தேனி கலெக்டரிடம் மனுக்கொடுத்தனர்.தேனி இந்து எழுச்சி முன்னணி சார்பில், மாவட்ட தலைவர் ராமராஜ் தலைமையில் அமைப்பின் நிர்வாகிகள், பெண்கள் மண் கலயங்களை சுமந்தும், வேப்பிலை மாலை அணிந்தும் கலெக்டர் அலுவலகத்திற்கு ஊர்வலமாக வந்தனர். போலீசார் தடுத்து நிறுத்தினர். அங்கு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பின்னர் நிர்வாகிகள் மட்டும் கலெக்டரை சந்திக்க அனுமதித்தனர். நிர்வாகிகள் கலெக்டர் வெங்கடாசலத்திடம் வழங்கிய மனுவில், ஆடி மாதம் அம்மன் கோயில்களில் பக்தர்களுக்கு கூழ் காய்ச்சி ஊற்றுவதற்கு அரிசி, கேழ்வரகு உள்ளிட்ட 25 டன் தானியங்கள் அரசு இலவசமாக வழங்க வேண்டும்,” என வலியுறுத்தினர்.பாலம் அமைக்க கோரிக்கை:போடி மேலச்சொக்கநாதபுரம் கரப்பட்டியை சேர்ந்த விவசாயிகள் ஜக்கையா, சீனிராஜ் ஆகியோர் கலெக்டரிடம் வழங்கிய மனு:கரட்டுப்பட்டி கழுகுமலை புலத்தில் 200 ஏக்கர் நிலம் விவசாயிகளுக்கு உள்ளது. 18 ம் கால்வாய் திட்ட பணிகள் தற்போது நடக்கிறது. இக் கால்வாய் மேற்கு பகுதியில் இருந்து கிழக்கு பகுதியில் உள்ள விளை நிலங்களுக்கு விவசாயிகள் செல்ல முடியாத வகையில் பாலம் அமைக்கின்றனர். கால்வாய் பணி துவங்கும் போது கல்குவாரி அருகே விவசாயிகள் வசதிக்காக பாலம் அமைத்து தரப்படும் என வாக்குறுதி அளித்தனர். இதனை மீறும் வகையில் தற்போது பாலம் அமைக்காமல் பணி நடக்கிறது. இதனால் விவசாயிகள், கால்நடைகள் ஆற்றை கடந்து செல்ல முடியாமல் சிரமப்பட நேரிடும். எனவே, கரட்டுப்பட்டியில் கழுகுமலை புலத்திற்கு செல்ல பாலம் வசதி செய்திட வேண்டும் என கோரினர். பொதுப்பணித்துறையினர் ஆய்வு செய்ய கலெக்டர் உத்தரவிட்டார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 14ல் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
சிவகாசி; சிவகாசி அருகே திருத்தங்கலில் நின்ற நாராயணப்பெருமாள் கோயிலில் ஆனி பிரமோற்சவ திருவிழாவை ... மேலும்
 
temple news
கோவை; கொடிசியா வெங்கடேச பெருமாள் கோவிலில் ஆனி மாதம் திருவோண விரதத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
சபரிமலை; நவக்கிரக பிரதிஷ்டைக்காக சபரிமலை நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. நாளை காலை 11:30 மணிக்கு நவக்கிரக ... மேலும்
 
temple news
காரைக்குடி; சாக்கோட்டையில் உள்ள சாக்கை வீரசேகர உமையாம்பிகை கோயில் ஆனித் திருவிழா தேரோட்டம் இன்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar