Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பொம்மையசுவாமி, பல்லகுண்டம்மாள் ... செல்லாத்தூர் தீமிதி திருவிழா செல்லாத்தூர் தீமிதி திருவிழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிவகங்கை அருகே சோழர் கால சிவன் கோயில் கண்டுபிடிப்பு
எழுத்தின் அளவு:
சிவகங்கை அருகே சோழர் கால சிவன் கோயில் கண்டுபிடிப்பு

பதிவு செய்த நாள்

06 ஜூன்
2017
12:06

சிவகங்கை: சிவகங்கை அருகே சோழர் கால பழமையான சிவன் கோயில் சிதைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. சிவகங்கை அருகே மேலப்பூங்குடி வெள்ளிமலை அடிவாரத்தில் பழமையான கோயில் ஒன்று சிதைந்த நிலையில் உள்ளது. இங்கு லிங்கம் இல்லாத பழமையான பீடம், தலை இல்லாத அக்னி பகவான் சிலை (ஆட்டுகடா வாகனம்), நந்தி போன்றவை சிதைந்து காணப்படுகின்றன. இப்பகுதியில் மக்கள் வாழ்ந்ததற்கான தடயமாக பானை ஓடுகள் பரவி கிடக்கின்றன.

அதனருகே பெரிய கல்தொட்டியும், ஸ்ரீதேவி சிலை உடைந்த நிலையிலும் காணப்படுகின்றன. சிவன் கோயில் எல்லைக்கற்களான சூலைக்கல் நான்கு திசையிலும் நடப்பட்டுள்ளது. இக்கோயில் பத்தாம் நுாற்றாண்டு சோழர் காலத்தில் கட்டப்பட்டு முகமதியர் படையெடுப்பால் அழிக்கப்பட்டது என்பதற்கு சில ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இக்கோயிலில் தங்கத் தேர் ஓடியதாக கூறப்படுகிறது. இக்கோயில் இருக்கும் பகுதி பூங்குடி நாடு என்று அழைக்கப்பட்டுள்ளது. தொல்லியன் ஆய்வாளர் கீழக்கரை உ.விஜயராமு கூறியதாவது:  சோழர்காலத்திற்கு பின் இப்பகுதியை வீர வல்லாளன் ஆட்சி செய்துள்ளார். தனக்கு தலைசிறந்த மகன் பிறக்க வேண்டும் என்பதற்காக தனது ராஜ்யத்தின் வருவாயில் ஒரு பகுதியை சிவனடியாருக்கும், சிவன் கோயிலுக்கும் செலவு செய்துள்ளார். அவரே சிவன் கோயிலுக்கு தங்கத் தேர் கொடுத்துள்ளார். இவர் அக்னி குலத்தை சேர்ந்தவர் என்பதால் சிவன் கோயிலில் அக்னிதேவருக்கும் பூஜை நடந்துள்ளது.

மூலவருக்கு பாலாபிஷேகம் செய்ய வளர்க்கப்பட்ட பசுக்கள் தண்ணீர் குடிப்பதற்கு பெரிய கல்தொட்டி உருவாக்கி உள்ளனர். இக்கோயிலுக்கு சொந்தமான நிலம் மூன்று கி.மீ., சுற்றளவில் இருந்துள்ளது. பெரிய அளவில் தேரோட்டம் நடந்துள்ளது. வல்லாளனை கி.பி. 1342 ல் சூழ்ச்சியால் மதுரை சுல்தான் கொன்றுள்ளார். எதிர்பார்த்த செல்வம் கிடைக்காததால் சிவன் கோயிலை சூறையாடியுள்ளான்.  தங்கத் தேரை பெரி கல்தொட்டி அருகே மக்கள் புதைத்துவிட்டதாக கூறப்படுகிறது. தலையில்லாத அக்னி தேவனின் சிலையை தற்போது மூக்குடைந்த பிள்ளையார் என, கூறி வருகின்றனர். மூன்று கண்மாய் கரைகள் இணையும் இப்பகுதியில் இந்த சிலை இருப்பதால் மூக்கரை பிள்ளையார் என கூறுகின்றனர். இப்பகுதியை முழுமையாக ஆய்வு செய்தால் பல வரலாற்று உண்மைகள் வெளிவரும், என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்தரகோசமங்கை; உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயில் பழமையும் புரதான சிறப்பையும் பெற்ற சிவாலயம் ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா ... மேலும்
 
temple news
சபரிமலை: -மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. பிப்., 17 வரை பூஜைகள் ... மேலும்
 
temple news
சோழவரம்: சோழவரம் அடுத்த எருமைவெட்டிப்பாளையம் கிராமத்தில், காமாட்சி அம்பாள் சமேத வரமுக்தீஸ்வரர் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், –  தமிழகத்தில் உள்ள பழமையான 18 சைவ ஆதினங்கள் ஒன்றான சூரியனார் கோவில், சிவாக்கிர யோகிகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar