Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிவகங்கை அருகே சோழர் கால சிவன் ... திருவள்ளூர் வீரராகவருக்கு வசந்த உற்சவம் நிறைவு திருவள்ளூர் வீரராகவருக்கு வசந்த ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
செல்லாத்தூர் தீமிதி திருவிழா
எழுத்தின் அளவு:
செல்லாத்தூர் தீமிதி திருவிழா

பதிவு செய்த நாள்

06 ஜூன்
2017
12:06

ஆர்.கே.பே ட்டை: தர்ம நெறிகளை போதிக்கும் மகாபாரத இதிகாச கதையை கேட்டும், கண்டும் அதை நாமும் வாழ்வில் கடை பிடித்தால், மழை பெ ய்யும், நாடு செழிக்கும், வாழ்வு வளம்பெறும் என்பது நம்பிக்கை. அந்த அடிப்படையிலேயே, கிராமங்களில் ஆண்டு தோறும் கோடையில், தீமிதி திருவிழா எனப்படும் மகாபாரத கதை, சொற்பொழிவாகவும், தெருக்கூத்தாகவும் நடத்தப்பட்டு வருகிறது.

ஆர். கே. பேட்டை அடுத்த, செல்லாத்தூரில், 25ம் தே தி, பகாசூரன் கும்பம் நிகழ்ச்சியுடன் தீமிதி திருவிழா களை கட்டியது. கிருஷ்ணன், தூது, குறவஞ்சி, கர்ண மோட்சம் என, பல்வேறு தெருக்கூத்து நாடகங்கள் நடத்தப்பட்டன. நேற்று முன்தினம் உச்சகட்டமான தீமிதி திருவிழா நடந்தது. இதற்காக, செல்லாத்தூர், ஆர்.கே.பே ட்டை, ஸ்ரீகிருஷ்ணாபுரம், கிருஷ்ணா குப்பம் மேடு,  வேலன்கண்டிகை உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் காப்பு கட்டி விரதம் மேற்கொண்டிருந்தனர். மாலை 6:00 மணிக்கு, அக்னி குண்டத்தில் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக, மாலை 5:00 மணிக்கு பக்தர்களின் வேண்டுதலின் படி, ஆர்.கே.பே ட்டையில் பலத்த மழை பெய்தது.ஆனாலும் அக்னி குண்டம் தொடர்ந்து அனல் வீசிக்கொண்டிருந்தது. இரவு 7:00 மணிக்கு, திரவுபதியம்மன் மற்றும் சக்தி கரகம் எனப்படும் பிரதான பூங்கரகம் ஏந்திய பக்தர்கள் அக்னி குண்டத்தில் இறங்கி தங்களின் நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். தீமிதி திருவிழாவின் இறுதி நாளில் பக்தர்களின் வேண்டுதலின் படி, மழை பெய்தது தெய்வ செயல் என, கிராமத்தினர் புளகாங்கிதம் அடைந்தனர். நேற்று, காலை 10:00 மணிக்கு, தர்மராஜாவுக்கு பட்டாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. இரவு 7:00 மணிக்கு திரவுபதியம்மன் வீதியுலா எழுந்தருளினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று ( ஜூலை 14) அதிகாலை மகா ... மேலும்
 
temple news
மதுரை; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று  அதிகாலை மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக ... மேலும்
 
temple news
மதுரை; முருகனின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 14 ஆண்டுகளுக்கு பின் ... மேலும்
 
temple news
விருதுநகர்; தென்திருப்பதி என்று அழைக்கப்படும் ஸ்ரீவில்லிபுத்துார் திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் ... மேலும்
 
temple news
சுப்ரமணிய சுவாமியின் கருவறை 773 இல் பராந்தக நெடுஞ்சடையன் காலத்தில், அவரது படைத்தலைவன் சாத்தன் கணபதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar