பதிவு செய்த நாள்
07
ஜூன்
2017
11:06
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், ஒவ்வொரு மாதமும் பவுர்ணமியில், லட்சக்கணக்கான பக்தர்கள், 14 கி.மீ., கிரிவலம் சென்று, அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனை தரிசனம் செய்து செல்கின்றனர். வைகாசி மாத பவுர்ணமி, நாளை மாலை, 5:23 மணிக்கு துவங்குகிறது. மறுநாள், இரவு, 7:31 மணி வரை உள்ளதால், இந்த நேரத்தில் கிரிவலம் வரலாம் என, அருணாசலேஸ்வரர் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.