Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பவித்ரோத்ஸவம் என்றால் என்ன? திருமலை சுப்ரபாத சேவை திருமலை சுப்ரபாத சேவை
முதல் பக்கம் » துளிகள்
ஏகாதசி நாளில் துளசி பறிக்கக் கூடாது என்பது ஏன்?
எழுத்தின் அளவு:
ஏகாதசி நாளில் துளசி பறிக்கக் கூடாது என்பது ஏன்?

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2017
05:06

மற்ற செடிகளைப்போல் நாம் துளசிச் செடியை பார்க்கக் கூடாது. மஹா விஷ்ணுவின் பக்தைகளுக்குள் முதன்மையானவள் துளசி தேவி. மஹாவிஷ்ணுவுக்கு மிகவும் பிரியமானவளும் கூட ஆகவே தான். நாம் துளசியை வளர்த்து தினசரி பூஜை செய்து நமஸ்கரிக்கிறோம். இப்படி பூஜைக்கு உகந்த துளசியை மஹா விஷ்ணுவுக்கு மாலையாகச் சூட அல்லது அர்ச்சனை செய்ய செடியிலிருந்து நாம் பறிக்கிறோம். தவிர்க்க இயலாமல் நாம் செய்யும் இந்தச் செயலை சில வழிமுறைகளோடு செய்ய வேண்டும்.

ஹே.... துளசி தேவியே! விஷ்ணுவிடம் உன்னைச் சேர்ப்பதற்காக, அர்ச்சிப்பதற்காக உன்னை நான் பறிக்கிறேன். நான் செய்யும் இந்த ஹிம்ஸையை மன்னித்து விடு என்ற சுலோகம் சொல்லி, கைகூப்பி பிரார்த்தித்து அதன் பின்னரே துளசியை செடியிலிருந்து கிள்ள வேண்டும். மேலும் மதியம் 12 மணிக்குப் பிறகும், தூய்மை யற்ற சமயத்திலும் துளசியை பறிக்கக் கூடாது போன்ற நியமங்களும் இதற்கு உண்டு. இவற்றில் ஏகாதசியன்று பறிக்கக் கூடாது என்பது ஒன்று. விஷ்ணு பக்தர்களான அனைவரும். விஷ்ணுவுக்குப் பிரியமான ஏகாதசி திதியன்று சாப்பிடாமல் உபவாஸம் இருந்து விஷ்ணுவை தியானித்து பூஜிக்கிறார்கள் அல்லவா! அதைப்போலவே விஷ்ணு பக்தையான துளசியும் ஏகாதசியன்று விஷ்ணுவை தியானித்துக்கொண்டு இருக்கிறாள். ஆகவே, அன்று துளசியைப் பறித்தல் விஷ்ணு தியானத்துக்கு இடையூறாக அமையும். ஆகவே, ஏகாதசி, துவாதசி, அமாவாசை போன்ற நாட்களில் துளசி பறிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்கிறது சாஸ்திரம்.

 
மேலும் துளிகள் »
temple news
சமஸ்கிருதத்தில் சீதளா என்றால், குளிர்ச்சி என்று பொருள். சீதளாதேவிக்கு பல பெயர்கள் உள்ள போதும், வட ... மேலும்
 
temple news
செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் வட்டம், பம்மல், அண்ணா நகர், மூங்கில் ஏரி பகுதியில் ஸ்ரீ ... மேலும்
 
temple news
ஆதிபராசக்தியை ஆடி மாதத்தில் வணங்கி நாம் பெற வேண்டிய அம்பிகையின் திருநாமங்கள் கூறி நலம் பெறுவோம். ... மேலும்
 
temple news
மேற்கு தாம்பரம் நகரில், முத்துரங்கம் பூங்கா என்று அழைக்கப்படும் பூங்காவானது, 75 ஆண்டுகளுக்கு முன், ... மேலும்
 
temple news
சென்னைக்கு அருகில் 23 கி.மீ., தொலைவில் ஓ.எம்.ஆர்., சாலை காரப்பாக்கம், சென்னை மாநகராட்சி 198 வது வார்டில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar