Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நிமிடத்தில் வாழ்க்கையை மாற்றும் ...
முதல் பக்கம் » துளிகள்
1500 ஆண்டுகள் பழமையான அனந்த பத்மநாபர் கோவில்
எழுத்தின் அளவு:
1500 ஆண்டுகள் பழமையான அனந்த பத்மநாபர் கோவில்

பதிவு செய்த நாள்

20 ஜன
2026
10:01

ஏரியினுள் 1,500 ஆண்டுகளாக பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார் அனந்த பத்மநாபர். சிக்கபல் லாபூர் மாவட்டம் சித்லகட்டாவின் ராமேனஹள்ளியில் உள்ளது ஒடேயனகெரே ஏரி. இந்த ஏரியில் தான், 1,500 ஆண்டுகளாக, சயன கோலத்தில், விஷ்ணு அருள்பாலித்து வருகிறார். புராணங்களின்படி, 1,500 ஆண்டுகளுக்கு முன், ஒடேயனகெரேயில், அனந்த பத்மநாபர் கோவில் கட்டப்பட்டது. காலப்போக்கில், கோவில் பகுதி முழுதும் தண்ணீர் சூழ்ந்து ஏரியாக மாறியது.


இந்த நீரையே பக்தர்கள் தங்கள் வீட்டு குடிநீருக்கு பயன்படுத்தி வந்தனர். கோடைகாலத்தில் கோவிலின் பாதி கருவறை தென்படும். அப்போது பக்தர்கள், ஏரிக்கரையில் நின்றபடி தரிசிப்பர். இந்த ஏரி, விஷ்ணுவால் ஆசிர்வதிக்கப்பட்டது என, பக்தர்கள் நம்புகின்றனர். ஒடேயனகெரே ஏரியை புனித குளம் என்றும் நம்புகின்றனர். கருவறையில், ஆதிசேஷன் மீது, சாய்ந்தபடி அனந்த பத்மநாபர் கோலத்தில் விஷ்ணு அருள்பாலிக்கிறார். அவரை வழிபடுவதால் குடும்ப வாழ்க்கையில் பாதுகாப்பு, செழிப்பு, நல்லிணக்கம் அதிகரிக்கும் என்று பக்தர்கள் நம்புகின்றனர். சுவாமியின் ஆசியை பெற, சதுர்த்தசி அன்று புனித கயிற்றை கையில் கட்டிக் கொள்கின்றனர்.


கோவில் முழுதும் ஏரியில் மூழ்கியிருப்பதால், இக்கோவில் தனித்துவமானதாக கருதப்படுகிறது. சுயம்புவாக தோன்றிய கருவறை, 40 முதல் 50 அடிக்கு கீழ் இருப்பதாக நம்புகின்றனர். முந்தைய கோபுரமும், 10 அடி நீரில் உள்ளது. தற்போது சிறிதாக தெரியும் கோபுரத்தின் மேல் பகுதியில், பக்தர்கள் எளிதாக வந்து வழிபடும் வகையில், கரையில் இருந்து படிக்கட்டுகளுடன் மேடை அமைத்து உள்ளனர்.

 
மேலும் துளிகள் »
temple news
கர்நாடகாவில் பல அம்மன் கோவில்கள் உள்ளன. இருப்பினும், அம்மனை நினைத்து மனம் உருக வேண்டினால், நிமிடத்தில் ... மேலும்
 
temple news
கர்நாடகாவின் பீதர் மாவட்டம், வளர்ச்சியில் பின்தங்கிய மாவட்டம். ஆனால், இங்குள்ள கோட்டைகள், புராதன ... மேலும்
 
temple news
ஹாவேரி மாவட்டம், பல அரச வம்சத்தினரின் ஆளுமைக்கு உட்பட்டிருந்த மாவட்டம். கதம்பர் முதல் மைசூரு அரச ... மேலும்
 
temple news
தெய்வீகம், யோகம், மருத்துவ குணம் கொண்டது குங்குமம். சுமங்கலியின் வகிட்டு குங்குமத்தில் மகாலட்சுமி ... மேலும்
 
temple news
பொங்கல் பண்டிகையானது மொத்தம் நான்கு நாட்கள் கொண்டாடப்படுகிறது. பொங்கலிற்கு முதல்நாள் போகி பண்டிகை, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar