Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சதுர்த்தி விரதம், வர சதுர்த்தி: ... சஷ்டி விரதம்: முருகனை வழிபட வேண்டும் வரம் கிடைக்கும்! சஷ்டி விரதம்: முருகனை வழிபட வேண்டும் ...
முதல் பக்கம் » துளிகள்
வசந்த பஞ்சமி: சரஸ்வதியை வழிபட மங்களகரமான வாழ்க்கை அமையும்!
எழுத்தின் அளவு:
வசந்த பஞ்சமி: சரஸ்வதியை வழிபட மங்களகரமான வாழ்க்கை அமையும்!

பதிவு செய்த நாள்

23 ஜன
2026
10:01

ஒருவர் பெற வேண்டிய மிக உயரிய செல்வம் ஞானம். அதை அருளும் சரஸ்வதி தேவி அவதார நாளாக வசந்த பஞ்சமி கொண்டாடப்படுகின்றது. ஆதியில், பிரம்ம தேவர் அனைத்து உலகங்களையும், உயிரினங்களையும் படைத்த பின்னரும், அவருக்கு ஏதோ குறை இருப்பது போலவே தோன்றியது. அனைத்துப் படைப்புகளும் அமைதியாக, மௌனமாக‌ இருந்தன. இது குறித்து சிந்தித்தவாறே பிரம்ம தேவர் தம் கமண்டலத்தை எடுத்தார். அப்போது அதிலிருந்து சில துளிகள் கீழே சிந்தின. அவை ஒருங்கிணைந்து, ஒரு பெரும் சக்தியாக, மிகுந்த பிரகாசத்துடன் உருவெடுத்தன. ஒரு அழகிய பெண், நான்கு திருக்கரங்களுடன் கூடிய உருவில் பிரம்ம தேவர் முன் தோன்றினாள்.. சுவடிகள், ஸ்படிக மாலை, வீணை முதலியவற்றைத் தாங்கியவளாகத் தோன்றிய அந்த மஹாசக்தி, தன் வீணையை மீட்டி, தேவகானம் இசைக்கத் தொடங்கினாள். ஞான ஒளிப் பிழம்பான அம்பிகை, கானம் இசைக்கத் தொடங்கியவுடன், பிரம்ம தேவரின் படைப்புகள், ஒசை  நயம் பெற்றன.. ஆறுகள் சலசலக்கும் ஒலியுடன் ஓடத் துவங்கின. கடல் பெருமுழக்கத்தோடு அலைகளைப் பிரசவித்தது.. காற்று பெருத்த  ஓசையுடனும்,  முணுமுணுக்கும் ஒலியுடனும் வீசியது. 


மனிதர்கள் மொழியறிவு பெற்றனர். பிரம்மதேவர் மகிழ்ந்தார்.வாக்வாதினி, வாகீசுவரி, பகவதி  என்றெல்லாம் அம்பிகையைப் போற்றித் துதித்தார். இவ்வாறு சரஸ்வதி அவதரித்த தினமே வசந்த பஞ்சமி நாள் என கொண்டாடப்படுகிறது.  சரஸ்வதி தேவிக்கு வசந்த பஞ்சமி தினத்தில் பூஜைகள் செய்து வழிபாடு செய்வதால், ஞானம் மற்றும் அறிவு சார்  கலைகளில் முன்னேற்றம் கிடைப்பதுடன், உயர்நிலைகளை அடைதலும் கிட்டும் என்பது நம்பிக்கை.  வட மாநிலங்களில் குறிப்பாக, மகாராஷ்டிரம், மேற்கு வங்காளம், ஒரிசா, அசாம் போன்ற இடங்களில் வசந்த பஞ்சமி சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. பஞ்சாப், காஷ்மீா், அசாம் மாநிலங்களில் வசந்த பஞ்சமி நாளில் சரஸ்வதி தேவிக்கு மஞ்சள் ஆடை, மஞ்சள் மலா் மாலைகள் அணிவிக்கப்படுகின்றன. மஞ்சள் ஆடை அணிந்துதான் மக்களும் பூஜை செய்கின்றனா். மஞ்சள் பிள்ளையாா் வைத்து வழிபட்டுப் பின்னா் தேவிக்கு மஞ்சள் நிறத்திலேயே இனிப்பு வகைகள் தயாாிக்கப்பட்டு நிவேதனம் செய்யப்படுகின்றன. மஞ்சள் நிற சேலைகள், மஞ்சள் நிற துப்பட்டாக்கள், ஜாிகை மற்றும் கோட்டா அலங்கார ஆடைகளைப் பெண்கள் அணிவாா்கள். எங்கு பாா்த்தாலும் மங்களகரமாக மஞ்சள் வண்ணம் தான் கொலுவீற்றிருக்கும்.


வசந்த பஞ்சமி அன்று மஞ்சள் நிற ஆடை அணிந்து, கேசரி, லட்டு, குங்குமப்பூ சேர்த்த இனிப்புகள் ஆகியவற்றை சரஸ்வதி தேவிக்கு படைத்து வழிபட வேண்டும். ஞானம், செழிப்பு, மங்களகரமான வாழ்க்கையை பெறுவதற்கு வசந்த பஞ்சமி அன்று சரஸ்வதி தேவியை வழிபடவேண்டும். மாணவர்கள் தங்களின் புத்தகங்களையும், கலைஞர்கள் தங்களின் இசைக்கருவிகளையும் சரஸ்வதி தேவியின் முன் வைத்து ஆசி பெறுவார்கள்.

 
மேலும் துளிகள் »
temple news
பெங்களூரை தாண்டியதும் பரபரப்புக்கு பஞ்சமில்லாத பசுமையும், அமைதியும் தவழும் ஒரு ஆன்மிக உலகம் உள்ளது. ... மேலும்
 
temple news
மகன்களான லவ – குசாவை கொல்ல, வில்லை ஏந்தியதால், தனக்கு ஏற்பட்ட பாவத்தை போக்க, சிவனை பிரதிஷ்டை செய்து ... மேலும்
 
temple news
பெங்களூரு ரூரல் மாவட்டம் ஹொஸ்கோட் அருகே நாகேரஹள்ளி கிராமத்தில் உள்ளது, சக்கர சவுடேஸ்வரி அம்மன் ... மேலும்
 
temple news
பொதுவாக ஒவ்வொரு கிராமத்திலும், சக்தி வாய்ந்த கிராம தேவதை கோவில்கள் இருக்கும். அதே போன்று, மைசூரின் ... மேலும்
 
temple news
பெங்களூரு ரூரல் மாவட்டம் ஆனேக்கல் தாலுகா ஜிகனியில் உள்ளது எல்லம்மா கோவில். எல்லம்மா தேவிக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar