ரிஷபம்: (கார்த்திகை 2,3,4, ரோகிணி, மிருகசீரிஷம் 1,2).. குடும்பத்துடன் சுற்றுலா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13ஜூன் 2017 03:06
உறுதியான உள்ளம் கொண்ட ரிஷப ராசி அன்பர்களே!
இந்த மாதம் ஐந்தாம் இடமான கன்னியில் உள்ள குரு தொடர்ந்து நன்மை தருவார். குடும்பத்தில் குதூகலம் ஏற்படும். செவ்வாய் ஜூலை 22-ல், மிதுனத்தில் இருந்து கடகத்திற்கு மாறி நன்மை தருவார். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை நடத்தி வைப்பார். பொருளாதார வளத்தை அதிகரிக்க செய்வார். பெண்களால் மேன்மை கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். வாழ்க்கையில் வளம் காணலாம். எடுத்த செயல்களை சிறப்பாக முடிக்கலாம்.
சில சமயங்களில் சூரியனால் பொருள் விரயமும், புதனால் அவப்பெயரும், செல்வாக்குக்கு பாதிப்பும் ஏற்படலாம். சற்று சிரமமான சூழ்நிலைகள் எட்டிப்பார்க்கும் போது, நமக்கு வேண்டாதவர்களிடம் இருந்து ஒதுங்கி இருந்தாலே இந்த பிரச்னைகள் சீராகி விடும். ஜூன் 28-க்கு பிறகு புதன் 3-ம் இடத்தில் இருப்பதால் பகைவர்களால் இடையூறு வரலாம். அரசு வகையில் அனுகூலமான போக்கு காணப்படவில்லை. எனவே வரவு,-செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும்.
மற்ற கிரகங்களின் அடிப்படையில் ஜூன் 22,23-ல் பெண்கள் மிகவும் உதவிகரமாக இருப்பர். ஜூன் 17, 18, 19, ஜூலை 15,16-ல் உறவினர்களின் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். அதே நேரம் ஜூன் 28,29ல் அவர்கள் வகையில் விரோதம் வர வாய்ப்பு உண்டு. சற்று ஒதுங்கி இருக்கவும். ஜூன் 26, 27ல் புத்தாடை, நகை வாங்கலாம். ஜூலை 28-க்கு பிறகு குடும்பத்தோடு ஆன்மிக சுற்றுலா சென்று வருவீர்கள். வீடு-, மனை, வாகனம் வாங்க யோகம் கூடி வரும். உடல்நிலையில் கண் தொடர்பான உபாதை வரலாம்.
தொழிலதிபர்கள், வியாபாரிகளுக்கு செவ்வாய் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் பொருள் களவு ஏற்பட வாய்ப்பு உண்டு. பாதுகாப்பை பலப்படுத்தவும்.
போட்டியாளர்கள் வகையில் தொல்லை வரும். அரசு வகையில் அனுகூலமான போக்கு காணப்படவில்லை. வரவு,-செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். தொழிலாளர் ஆதரவு சுமாராகவே இருக்கும். தொழிலில் முதலீட்டை தற்போது அதிகப்படுத்த வேண்டாம்.
அனுபவசாலிகளின் ஆலோசனையைப் பின்பற்றுவது நல்லது. ஜூன் 20, 21, 24, 25-ல் நிர்வாகத்தை உங்கள் நேரடி பார்வையில் வைத்துக் கொள்ளவும். ஜூலை 3, 4-ல் எதிர்பாராத வகையில் பணவரவு இருக்கும்.
பணியாளர்களுக்கு குருவால் பதவி உயர்வு கிடைக்கும். இடமாற்றம் ஏற்படுமோ என பயந்து இருந்தவர்களுக்கு அந்த பிரச்னை நீங்கி விடும். ஜூன் 28-க்கு பிறகு ஊழியர்கள் வேலையில் கவனமுடன் இருக்கவும். ஜூன் 15, 16 ஜூலை 12, 13 14ல் எதிர்பாராத வருமானத்துக்கு இடமுண்டு. சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும். வேலையில் இருந்து தற்காலிக நீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் பணிவாய்ப்பு பெறுவர். சக ஊழியர்கள் தக்க சமயத்தில் உதவி செய்வர். அதிகாரிகளின் ஒத்துழைப்பு சீராக இருக்கும். பணி விஷயமாக அடிக்கடி வெளியூர் செல்ல நேரிடும்.
கலைஞர்களுக்கு காரியத்தடை, பொருள் நஷ்டம் ஏற்படலாம். விடாமுயற்சியால் புதிய ஒப்பந்தங்கள் கிடைத்தாலும் எதிர்பார்த்த வருமானம் இருக்காது. சக கலைஞர்களின் ஆதரவு கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பதவி கிடைக்காது. முயற்சி தான் உங்களை அரசியலில் தக்க வைக்கும்.
விவசாயிகளுக்கு பழம், பயறு, எள், கரும்பு மூலம் நல்ல வருமானம் காணலாம். கால்நடை வளர்ப்பின் மூலம் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். ஜூன் 28-க்கு பிறகு புதிய சொத்து வாங்க அனுகூலம் உண்டு.
மாணவர்களுக்கு குருவால் முன்னேற்ற பலன்கள் கிடைக்கும். புதன் சாதகமாக இல்லாததால் போட்டிகளில் வெற்றி காண கடும் முயற்சி எடுக்க வேண்டும். பெற்றோர், ஆசிரியர்களின் ஆலோசனையை ஏற்பது வளர்ச்சிக்கு வழிவகுக்கும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.
பெண்கள் குடும்ப வாழ்வில் குதூகுலமாக இருப்பர். ஜூன் 5, 6, 7- சிறப்பான நாட்களாக அமையும். பிறந்த வீட்டில் இருந்து பொருட்கள் வரும். அக்கம் பக்கத்தினர் தொல்லையில் இருந்து விடுபடலாம். சகோதர வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வேலை பார்க்கும் பெண்கள் ஜூன் 28-க்கு பிறகு உயர் பதவி அடைய வாய்ப்பு இருக்கிறது. எதிர்பார்த்த சலுகை படிப்படியாக கிடைக்கும். பெண்களை பங்குதாரராக கொண்ட தொழில் நிறுவனங்கள் சிறப்படையும்.
நல்ல நாள்: ஜூன் 15, 16, 17, 18, 19, 22, 23, 26, 27, ஜூலை 3, 4, 5, 6, 12, 13, 14, 15, 16. கவன நாள்: ஜூலை 7, 8, 9- சந்திராஷ்டமம். அதிர்ஷ்ட எண்-: 2,3 நிறம்: மஞ்சள் சிவப்பு
பரிகாரம் * தினமும் காலையில் சூரிய வழிபாடு * செவ்வாயன்று முருகனுக்கு பாலாபிஷேகம் * புதன்கிழமை குலதெய்வ வழிபாடு.
மேலும்
சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை) »