பதிவு செய்த நாள்
16
ஜூன்
2017
12:06
ஊத்துக்கோட்டை;சாய்பாபா சன்னதியில், உற்சவருக்கு நடந்த சிறப்பு பூஜையில் ஏராளமானோர் கலந்து கொண்டு, சுவாமியை வழிபட்டனர்.ஊத்துக்கோட்டை, ஆனந்தவல்லி சமேத திருநீலகண்டேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் வளாகத்தில், சாய்பாபா சன்னதி உள்ளது. ஒவ்வொரு வியாழக்கிழமையும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், பஜனைகள் ஆகியவை நடைபெறும்.இங்கு பக்தர்கள் பங்களிப்புடன் ஐம்பொன்னால் ஆன உற்சவர் சிலை வாங்கப்பட்டது. நேற்று, மூலவர் மற்றும் உற்சவருக்கு பக்தர்கள் பால் அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து பன்னீர், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட அபிஷேகப் பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின் சிறப்பு அலங்காரம் செய்து, மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.முன்னதாக, யாக பூஜை செய்யப்பட்டது. இரவு பக்தர்களின் பஜனை நிகழ்ச்சியும், மகா தீபாராதனையும் நடந்தது.