ஆர்.கே.பேட்டை : அமாவாசை திதியை ஒட்டி, அம்மன் கோவில்களில் நேற்று, சிறப்பு உற்சவம் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். ஆனி மாதம் அமாவாசை திதியை ஒட்டி அம்மன் கோவில்களில் நேற்று சிறப்பு உற்சவம் கொண்டாடப்பட்டது. ஆர்.கே.பேட்டை அடுத்த வெள்ளாத்துார் வெள்ளாத்துாரம்மன் கோவிலில் நேற்று காலை 10:30 மணிக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம் நடந்தது. சுற்றுப்பகுதியைச் சேர்ந்த திரளான பக்தர்கள், அம்மனை தரிசனம் செய்தனர். கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து அம்மனுக்கு படையல் வைத்தனர். இதே போல், அஸ்வரேவந்தாபுரம் திருக்காவேரி குளக்கரையில் உள்ள பொன்னியம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நடந்தது.மேலும் வங்கனுார் செவிண்டியம்மன், பொதட்டூர்பேட்டை பொன்னியம்மன், பாண்டரவேடு தொப்பையம்மன், அம்மையார்குப்பம் காமாட்சியம்மன், பள்ளிப்பட்டு கொள்ளாபுரியம்மன் உள்ளிட்ட கோவில்களிலும் நேற்று அமாவாசை உற்சவம் சிறப்பாக நடந்தது. வெள்ளிக்கிழமை என்பதால், வழக்கத்தை விட பக்தர்களின் கூட்டம் அதிகளவில் இருந்தது. நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.