பதிவு செய்த நாள்
29
ஜூன்
2017
01:06
தர்மபுரி: தர்மபுரியில் பழைய மிட்டாரெட்டி அள்ளி ரோட்டில் உள்ள சித்தலிங்கேஸ்வரர் மற்றும் முத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, நேற்று பக்தர்கள் பங்கேற்ற பால்குட ஊர்வலம் நடந்தது. இந்த கோவில் கும்பாபிஷேகம், நாளை, 30ல் நடக்கிறது. முன்னதாக, நேற்று காலை, 10:30 மணிக்கு, தர்மபுரி எஸ்.வி., ரோடு சாலை விநாயகர் கோவிலில் இருந்து, திரளான பக்தர்கள், பால்குடம் எடுத்து கோவில் வரை ஊர்வலமாக சென்றனர். பின், 11:30 மணிக்கு, ஊர்வலமாக கொண்டு வரப்பட்ட பால்குடங்களை கொண்டு, சுவாமிக்கு அபிஷேகம் நடந்தது. நாளை காலை, 9:45 மணிக்கு, கோவில் கோபுர கலசத்துக்கு, சிவாச்சாரியார்கள் புனிதநீர் ஊற்றி, கும்பாபிஷேகத்தை நடத்தி வைக்கின்றனர். இதையடுத்து, ஜூலை, 1முதல், 48 நாட்களுக்கு மண்டல பூஜை நடக்க உள்ளது.