Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சின்னாளப்பட்டி அஞ்சலி வரத ஆஞ்சநேயர் ... அருப்புக்கோட்டை கோயிலில் மீனாட்சி திருக்கல்யாணம் அருப்புக்கோட்டை கோயிலில் மீனாட்சி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சீர்காழி தாளபுரீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்: பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஜூலை
2017
05:07

மயிலாடுதுறை: நாகை மாவட்டம் சீர்காழி, திருக்கோலக்கா தெருவில் தேவாரப் பாடல் பெற்ற திருத்தாளமுடையார் கோயில் என்று அழைக்கப்படும் ஓசை நாயகி அம்பாள் சமேத தாளபுரீஸ்வரர் சுவாமி கோயிலில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.

Default Image
Next News

இக்கோயிலில் திருஞானசம்பந்தர் தனது 3 வயதில் கைகளால் தாளமிட்டபடி பதிகம் பாடியுள்ளார். அவருக்கு சிவபெருமான் பொற்றாளத்தையும், அம்பாள் அதற்கான ஓசையையும் வழங்கியதாக ஐதீகம். இத்தலத்தில் சுவாமி, அம்பாளை வணங்கினால் காது கேளாத, வாய்பேச முடியாத குழந்தைகளின் குறைகள் நிவர்த்தியடையும் என கூறப்படுகிறது.

இத்தகைய சிறப்பு வாய்ந்த கோயிலின் திருப்பணிகள் முடிவடைந்து கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த மாதம் 28ம் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கின. இன்ரு காலை 6ம் கால யாக சாலை பூஜைகள் முடிந்து பூர்ணாஹுதி மற்றும் மஹா தீபாராதனைகள் நடத்தப்பட்டது. தொடர்ந்து யாக சாலையில் இருந்து கடங்கள் புறப்பட்டு கோயிலை வலம்வந்து சுவாமி, அம்பாள் விமானங்களை அடைந்தது. அதனையடுத்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத, விமான கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தி வைக்கப்பட்டது. தொடர்ந்து சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம், அலங்காரம் மற்றும் மஹா தீபாராதனை நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை ராமநாத சிவாச்சாரியார் தலைமையிலானோர் நடத்தி வைத்தனர். இதில் தருமபுரம் ஆதின இளைய சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமி, திரப்பனந்தாள் காசி மடத்து இளைய சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ திரு ஞானசம்பந்த தம்பிரான் சுவாமிகள் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றத்தில், சித்திரை பிரம்மோத்சவத்தை முன்னிட்டு, 63 நாயன்மார்கள், ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: 100 சதவீத ஓட்டுப்பதிவு விழிப்புணர்வு ஏற்படுத்திய தாக்கத்தால் ராமேஸ்வரத்தில் பக்தர்கள், ... மேலும்
 
temple news
சென்னை: சைதாப்பேட்டை, சொர்ணாம்பிகை உடனுறை காரணீஸ்வரர் கோவில் சித்திரைப் பெருவிழாவின் மூன்றாம் நாளான ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில், பட்டாபிஷேக ராமர் சன்னதி உள்ளது. ஒவ்வொரு ... மேலும்
 
temple news
உத்தரகாண்ட்: உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற பத்ரிநாத் கோவில், இன்று (ஏப்ரல் 23 )காலை 6:15 மணிக்கு, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar