Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

கோட்டை மாரியம்மன் பண்டிகை ... புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தில் குரு பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம் புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மதுராந்தகம் ஏரிகாத்த ராமர் கோவில் தேரோட்டம்
எழுத்தின் அளவு:
மதுராந்தகம் ஏரிகாத்த ராமர் கோவில் தேரோட்டம்

பதிவு செய்த நாள்

10 ஜூலை
2017
01:07

மதுராந்தகம்: மதுராந்தகம் ஏரி காத்த ராமர் கோவில் பிரம்மோற்சவ தேரோட்டம், வழக்கத்தை விட கூடுதல் பிரமாண்டத்தோடு கோலாகலமாக நடைபெற்றது. மதுராந்தகத்தில் ஏரிகாத்த கோதண்டராமர் கோவில் பிரம்மோற்சவம் கடந்த, 30ம் தேதி உற்சாகத்தோடு துவங்கியது. 2ல், கொடியேற்றம், தினமும் பல்வேறு பூஜைகள், சிறப்பு அபிஷேகங்கள் என, களைகட்டிய உற்சவத்தின் முக்கிய நிகழ்வான, 8ம் நாள் திருத்தேர் பவனி, நேற்று நடைபெற்றது. கடந்த ஆண்டுகளை விட, கூடுதல் உற்சாகத்தோடு அதிகமான பக்தர்கள் பங்கேற்றனர். காலை, 9:40 மணிக்கு, நிலையிலிருந்து கிளம்பிய தேர், மதுராந்தகம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக பவனித்தது; பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்து வந்தனர்.சில காரணங்களால், கோவிலின் முக்கிய அர்ச்சகர்கள் வெளியேற்றப்பட்ட நிலையில், பிரம்மோற்சவ நிகழ்வின் போது, மேலும் ஒரு அர்ச்சகர் விடுப்பு எடுக்க முயன்றது, நிர்வாகத்தினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த சூழ்நிலையையும் நிர்வாகத் தரப்பு சமாளித்து, வழக்கத்தை விட சிறப்பாக பிரம்மோற்சவத்தைநடத்தியதாக, ஆன்மிக அன்பர்கள் தெரிவித்தனர். மதுராந்தகம், டி.எஸ்.பி., தலைமையில் ஏராளமான போலீசாரும், காவல் நண்பர்களும், ஊர்க்காவல் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

குடிநீர் பற்றாக்குறை:
வழக்கத்தை விட அதிகமான பக்தர்கள் இந்தாண்டு குவிந்தாலும், அவர்களுக்கான குடிநீர்த் தேவையை நகராட்சி நிர்வாகம் பூர்த்தி செய்யவில்லை. அடுத்தாண்டாவது, முக்கிய வீதிகளில், ஆங்காங்கே தற்காலிக சிறு குடிநீர் தொட்டிகளை வைக்க, நகராட்சி ஆவன செய்யலாம்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவன்மலை கோவில் ஆண்டவர் உத்தரவுப்பெட்டியில், மண் கலயத்தில் கடல்நீர் வைத்து நேற்று சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில், அனந்தபுஷ்கரணி குளக்கரையோரம் சிமென்ட் கல் சாலை அமைக்கும் பணி ... மேலும்
 
temple news
புரட்டாசி மாத மூன்றாவது சனிக்கிழமையான நேற்று, பெருமாள் கோவில்களில் கோவிலில் சிறப்பு பூஜைகள் ... மேலும்
 
temple news
அவிநாசி அருகே வெள்ளியம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ பூமி நீளா சமேத ஸ்ரீ கரி வரதராஜ பெருமாள் கோவிலில், ... மேலும்
 
temple news
போடி: புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமையை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar