Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மழை வேண்டி பாடை கட்டி நூதன வழிபாடு ஆஞ்சநேயர் கோவில் முதலாமாண்டு விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோட்டை மாரியம்மன் கோவில் ஆடிப்பண்டிகை அம்போ
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஜூலை
2017
12:07

சேலம்: கோட்டை மாரியம்மன் கோவிலில், நடப்பாண்டு ஆடிப்பண்டிகை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சேலம், கோட்டை மாரியம்மன் கோவில் திருப்பணியால், கருவறை தவிர்த்து, அனைத்து பகுதிகளும் இடித்து, பாலாலயம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், பக்தர்களில் ஒரு பிரிவினர், கருவறை விவகாரம் குறித்து, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால், கட்டுமானப்பணி தொடங்கவில்லை. இதனால், நடப்பாண்டு பண்டிகை நடத்த முடியாத சூழல் நிலவுகிறது. கோவில் நிர்வாகத்துக்கு எதிராக, சில இந்து அமைப்புகளும் போர்க்கொடி தூக்கியுள்ளன. கோவில் நிர்வாகமும், பண்டிகை நடத்த எந்த நடவடிக்கையும் எடுக்காததால், நடப்பாண்டு கோட்டை மாரியம்மன் கோவில் பண்டிகை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

கோவில் செயல் அலுவலர் மாலா கூறுகையில், மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசிடம் பேசி, பண்டிகை குறித்து முடிவு எடுக்கப்படும். இப்போது, வேறு எதுவும் சொல்வதற்கு இல்லை, என்றார்.

144 தடை உத்தரவு? ஆடிப்பண்டிகை நடத்த கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்காத நிலையில், சில இந்து அமைப்புகள், பண்டிகை நடத்துவோம் என அறிவித்துள்ளன. இதனால், அசம்பாவிதம் நடக்கும் சூழல் உருவாகி உள்ளது. இந்து அமைப்புகளை உளவு பிரிவு, நுண்ணறிவு பிரிவு போலீசார் கண்காணிக்கின்றனர். பிற மாரியம்மன் கோவில்களில், பண்டிகை பூச்சாட்டுதலுடன் தொடங்கும் நிலையில், கோட்டை மாரியம்மன் கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில், 144 தடை உத்தரவு பிறப்பிக்க, மாவட்ட நிர்வாகத்துக்கு பரிந்துரைப்பது குறித்து, போலீஸ் அதிகாரிகள் ஆலோசிப்பதாக, போலீஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மகாவிஷ்ணுவின் மூன்றாவது அவதாரம் வராக வடிவம் தோன்றிய தினம் இன்று! பல வரங்கள் பெற்ற இரண்யாட்சன் அனைத்து ... மேலும்
 
temple news
 பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த திருவதிகை ரங்கநாத பெருமாள் கோவில் கும்பாஷேகம் நேற்று நடந்தது.பண்ருட்டி ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி சுந்தர விநாயகர் கோவில் தெருவில் வில்வ விநாயகர் கோவிலின் 6ம் ஆண்டு ... மேலும்
 
temple news
 விருதுநகர்: வத்திராயிருப்பு அக்ரஹாரத்தில் உள்ள ராமமூர்த்தி சுவாமி பஜனை மடத்தில் ராம நவமி உற்ஸவம் 9 ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர்கோவிலில், ஆண்டுதோறும் வெகு விமர்சையாக நடைபெறும் பங்குனி உத்திரம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar