அய்யாவாடி மகா பிரத்தியங்கிரா தேவி கோயிலில் நிகும்பலா யாகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24ஜூலை 2017 11:07
மயிலாடுதுறை: தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த அய்யாவாடி கிராமத்தில் மகா பிரத்தியங்கிராதேவி கோயில் அமைந்துள்ளது. எட்டு திக்கும் மயானத்தால் சூழப்பட்ட இக்கோயிலின் ஸ் தல விருட்சம் 5 வகையான இலைகளை கொண்டதாக உள்ளது. இத்தலத்தில் ராவணன் மகன் மேகநாதனும், பஞ்சபாண்டவர்களும் அம்பாளை பூஜித்து வேண்டிய வரங்களை பெற்றது ஐதீகம்.
இத்தகைய பிரசித்தி பெற்ற இந்த கோயிலில் அம்மாவாசை தோறும் மிளகாய் வற்றல் கொண்டு நடத்தப்படும் நிகும்பலா யாகம் சிறப்பு வாய்ந்தது. இந்த யாகத்தில் கலந்து கொண்டு அம்பாளை சரணடைந்தால் சத்ரு உபாதைகள் நீங்கி, சகல ஐஸ்வர்யங்களையும் பெருவர் என கூறப்படுகிறது. அதன்படி ஆடி அம்மாவாசையான நேற்று காலை மகா பிரத்தி யங்கிரா தேவியை கோயில் மண்டபத்தில் எழுந்தருள செய்து 16 சிவாச்சாரியார்கள் சிறப்பு ஜெபங்கள் மற்றும் பூஜைகளை நடத்தினர். மதியம் ஒரு மணிக்கு வேத மந்திரங்கள் ஓத த ண்டபாணி சிவாச்சாரியார் யாக குண்டத்தில் மிளகாய் வற்றலை சேர்த்து நிகும்பலா யாகத்தை நடத்தி வைத்தார். அதனை அடுத்து மகா பிரத்தியங்கிரா தேவிக்கு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடத்தப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு அம்பாளை தரிசனம் செய்தனர். ஆடி அம்மாவாசையை முன்னிட்டு பக்தர்கள் வசதிக்காக கு ம்பகோணத்தில் இருந்து அய்யாவாடிக்கு சிறப்பு அரசு பேருந்துகள் இயக்கப்பட்டன.