சரநாராயண பெருமாள் கோவிலில் ஆடி அமாவாசை சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24ஜூலை 2017 12:07
பண்ருட்டி: திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு மூலவர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். பண்ருட்டி அடுத்த திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் நேற்று ஆடி அமாவாசையை முன்னிட்டு மூலவர் பெருமாள் பூவங்கி அலங்காரத்தில் அருள்பாலித்தார். காலை 6:30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 7:30 மணிக்கு நித்யபடி பூஜை, 9:00 மணிக்கு உற்சவர் பெருமாள் ஸ்ரீதேவி, பூமிதேவி சகிதமாக வைகுண்டநாதனாக சிறப்பு அலங்காரத்தில் உள் புறப்பாடு நடந்து, திருக்கண்ணாடி அறையில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பகல் 12:30 மணிக்கு உச்சிகால பூஜை, மாலை 4:00 மணிக்கு நடைதிறப்பு, மாலை 6:00 மணிக்கு நித்யபடி பூஜை, இரவு 9:00 மணிக்கு ஏகாந்த சேவை நடந்தது.