பதிவு செய்த நாள்
31
ஜூலை
2017
02:07
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் நடந்த ஆடிப்பூர விழா மற்றும் 11 நாட்கள் பக்தர்கள் கலந்து கொண்டு உண்டியலில் செலுத்திய, 52.75 லட்சம் ரூபாய்ரொக்கம் மற்றும் 275 கிராம் தங்கத்தைகாணிக்கையாக செலுத்தி உள்ளனர். திருத்தணி முருகன் கோவிலுக்கு, தினசரிஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து மூலவரை தரிசித்து செல்கின்றனர். மேலும், கடந்த 26ம் தேதி, ஆடிப் பூரத்தையொட்டி, ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் காவடிகளுடன் வந்து மூலவரை வழிபட்டனர். அப்போது, பக்தர்கள்மலைக்கோவிலில் உள்ள உண்டியல் களில், பணம், தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களை, காணிக்கையாக செலுத்தினர். அந்த வகையில், 11 நாட்களில் உண்டியலில் செலுத்திய பக்தர்களின் காணிக்கை, கோவில் தக்கார் ஜெய்சங்கர், இணை ஆணையர் சிவாஜி, திருவள்ளூர் மாவட்ட உதவி ஆணையர் ஜான்சிராணி, ஆகியோர் முன்னிலையில் நேற்று முன்தினம் உண்டியல்கள் திறக்கப்பட்டு, கோவில் ஊழியர்களால் எண்ணப்பட்டன. இதில், 52.75 லட்சம் ரொக்கம், 275 கிராம் தங்கம், 4,263 கிராம் வெள்ளி ஆகியவை இருந்தன.