பதிவு செய்த நாள்
03
ஆக
2017
12:08
திருத்தணி : ஆடி மாதம், செவ்வாய் கிழமையையொட்டி, அம்மன் கோவில்களில், பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். திருத்தணி, காந்தி நகர், துர்கையம்மன் மற்றும் கங்கையம்மன் கோவிலில், ஆடி மாத செவ்வாய் கிழமையையொட்டி, மூலவருக்கு, பாலாபிஷேகம், மலர் அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. திரளான பெண்கள் கோவில் வளாகத்தில், பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்து வழிபட்டனர். திருத்தணி நகரில் உள்ள, படவேட்டம்மன் கோவில், தணிகை மீனாட்சி அம்மன் கோவில், தணிகாசலம்மன் கோவில், வன துர்க்கை அம்மன், காந்தி நகர் நாகாலம்மன் கோவில், பழைய பஜார் தெருவில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் உட்பட நகரில் உள்ள அம்மன் கோவில்களில், ஆடி மாதம் செவ்வாய் கிழமையையொட்டி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் நடந்தன. சில பெண்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்தும், கூழ் ஊற்றி அம்மனுக்கு பூஜைகள் நடத்தி வழிபட்டனர். மேலும், அம்மன் கோவில்களில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.