பதிவு செய்த நாள்
03
ஆக
2017
12:08
திருத்தணி : ரேணுகா படவேட்டம்மன் கோவிலில், இரண்டாம் ஆண்டு, தீமிதி விழா, நாளை, நடைபெறுகிறது. திருத்தணி ஒன்றியம், ராமாபுரம் கிராமத்தில், ரேணுகா படவேட்டம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலின் இரண்டாம் ஆண்டு, தீமிதி திருவிழா, நாளை நடக்கிறது. இவ்விழாவையொட்டி, நாளை, காலை, 8:00 மணிக்கு, 108 பால்குட ஊர்வலம், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து, கூழ்வார்த்தல் நிகழ்ச்சியும், மாலையில் கோவில் வளாகத்தில் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது. மாலை, 6:00 மணிக்கு, 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்பு கட்டி தீ மிதிக்கின்றனர்.