Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சந்திரசூடேஸ்வரர் கோவிலில் ... இன்றைய சிறப்பு!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாளை., தூய சவேரியார் பேராலயத்தில் அசன விருந்து!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 நவ
2011
12:11

திருநெல்வேலி : பாளை., தூய சவேரியார் பேராலய பெருவிழாவை முன்னிட்டு நேற்று ஆலய வளாகத்தில் பொதுமக்களுக்கு அசன விருந்து வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. பாளை., தூய சவேரியார் பேராலய பெருவிழா கடந்த 24ம்தேதி மாலை கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனையடுத்து தினமும் காலை, மாலையில் திருப்பலி, மறையுரை நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. நிகழ்ச்சியின் 3ம் நாளான நேற்று காலை பாளை., அரசு ஊழியர் குடியிருபுபு, ஜவகர் நகர் பங்குதந்தை சந்தியாகு திருப்பலி நிகழ்த்தினார். பேட்டை பங்குதந்தை செல்வன் மறையுரை ஆற்றினார். மாலையில் பாளை., மறை மாவட்ட பொருளாளர் மரிய பிரான்சிஸ் திருப்பலியையும், அம்பாசமுத்திரம் மறை வட்ட அதிபர் அருள் அம்புரோஸ் மறையும் ஆற்றினர். தொடர்ந்து சிறப்பு பிரார்த்தனைக்கு பிறகு அசன விருந்து வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் பேராலய பங்குதந்தை அந்தோணிராஜ், உதவி பங்கு தந்தை பிரிட்டோ, சுரேஷ்குமார், நாட்டார்குளம் பங்குதந்தை இருதயராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேராலய பங்கு மக்கள், பங்கு பேரவையினர் மற்றும் ஏராளமான பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று அசன விருந்தை வாங்கி சென்றனர். இதனை முன்னிட்டு ஆலய வளாகத்தில் மாநகர போலீசார் பாதுகாப்புபணியில் ஈடுபட்டிருந்தனர். ஏற்பாடுகளை பேராலய அசனக்குழுவினர் செய்திருந்தனர். இன்று(27ம்தேதி) மாலை 6மணிக்கு ஒப்புரவு அருட்சாதனம் வழங்கும் நிகழ்ச்சியும், வரும் டிசம்பர் 2ம்தேதி மாலை வழிபாடு, பாதுகாவலரின் திருவுருவப்பவனியும் நடக்கிறது. 3ம்தேதி பெருவிழா திருப்பலி, புதுநன்மை விழாவும், மாலையில் கொடியிறக்கம் மற்றும் கலை விருந்தும், 4ம்தேதி காலை 7.30 மணிக்கு உறுதிபூசுதல் நிகழ்ச்சியும் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்செந்தூர், சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்று வரும் ஆவணி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான ... மேலும்
 
temple news
சூரியனின் அருளைப் பெற ஆவணி ஞாயிறு விரதம் சிறப்பானதாகும். இது காலம் காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் ... மேலும்
 
temple news
காரைக்கால்; திருநள்ளாறு உலகப்புகழ் பெற்ற சனீஸ்வர பகவான் கோவிலில் ஆவணி சனிக்கிழமை முன்னிட்டு சிறப்பு ... மேலும்
 
temple news
விழுப்புரம்; பிரசித்தி பெற்ற மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் ஆவணி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் ... மேலும்
 
temple news
நாகப்பட்டினம்; நாகையில்,63 நாயன்மார்களில் ஒருவரான,அதிபத்த நாயனாருக்கு சிவபெருமான், தேவியருடன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar