பதிவு செய்த நாள்
24
ஆக
2017
11:08
திருப்போரூர்: கந்தசுவாமி கோவில் உண்டியல்களில், 24.84 லட்சம் ரூபாய் காணிக்கையாக கிடைத்துள்ளது. திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், மூன்று மாதங்களுக்கு ஒருமுறை, உண்டியல் காணிக்கைகள் எண்ணப்படுவது வழக்கம். அதன்படி, கோவிலில் உள்ள நிரந்தர உண்டியல்கள் மற்றும் தற்காலிக உண்டியல்கள் என, ஏழுஉண்டியல்கள் நேற்று திறக்கப்பட்டு, காணிக்கை எண்ண ப்பட்டன. அதில், 24.84 லட்சம் ரூபாயும், 154 கிராம் தங்கமும், 1.67 கிலோ வெள்ளியும் கிடைத்துள்ளது. கோவில் உண்டியல்கள், காஞ்சிபுரம் உதவி ஆணையர் ரமணி மற்றும் கோவில் செயல் அலுவலர் நற்சோணை ஆகியோரின் முன்னிலையில், திறக்கப்பட்டு எண்ணப்பட்டன.