பதிவு செய்த நாள்
26
ஆக
2017
12:08
திருத்தணி;சப்த கன்னியம்மன் கோவிலில், நேற்று நடந்த கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள்பங்கேற்றனர்.திருத்தணி அடுத்த காசிநாதபுரம் கிராமத்தில், சப்த கன்னியம்மன் கோவிலில், நேற்று முன்தினம் கரிகோலம் மற்றும் கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. இதற்காக கோவில் வளாகத்தில், 108 கலசங்கள் அமைத்து, நான்கு கால யாக சாலை பூஜைகள் நடந்தன. நேற்று காலை, 6:00 மணிக்கு கலச ஊர்வலம் நடந்தது. 7:00 மணிக்கு மூலவர் மற்றும் கோவில் விமானத்தின் மீது புனிதநீர் ஊற்றி மஹா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.திரளான பெண்கள், கோவில் வளாகத்தில் பொங்கலிட்டனர். இரவு, 7:30 மணிக்கு உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.திருத்தணி, காசிநாதபுரம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் பங்கேற்று, வழிபட்டனர்.