Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கஸ்தூரி ரங்கநாதர் கோவிலில் ... படவேட்டம்மன் கோவிலில் ஜாத்திரை விழா நிறைவு படவேட்டம்மன் கோவிலில் ஜாத்திரை விழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஊத்தங்கரை அருகே 1,100 ஆண்டுகள் பழமை வாய்ந்த சமணர் சிலை: ஆய்வில் கண்டுபிடிப்பு
எழுத்தின் அளவு:
ஊத்தங்கரை அருகே 1,100 ஆண்டுகள் பழமை வாய்ந்த சமணர் சிலை: ஆய்வில் கண்டுபிடிப்பு

பதிவு செய்த நாள்

30 ஆக
2017
11:08

கிருஷ்ணகிரி: ஊத்தங்கரை அருகே, வழிபாட்டில் வைக்கப்பட்டிருந்த சிலை, 1,100 ஆண்டுகள் பழமை வாய்ந்த, சமண தீர்த்தங்கரர் சிலை என்பதும், அதன் வரலாறும் தெரிய வந்துள்ளது. கிருஷ்ணகிரி, அரசு ஆடவர் கலைக்கல்லூரி வரலாற்றுத்துறை பேராசிரியர் வெங்கடேஸ்வரன் மற்றும் முனைவர் பட்ட ஆய்வு மாணவர்கள், ஊத்தங்கரை அடுத்த ராமகிருஷ்ணம்பதி கிராமத்தில், கள ஆய்வு சென்றனர். அங்கு, 1,100 ஆண்டுகள் பழமையான சமண தீர்த்தங்கரர் சிலை குறித்தும், அதன் வரலாறு குறித்தும் கண்டுபிடித்தனர். இந்த சிலை, நாக்பூரில் இருந்து ராமகிருஷ்ணம்பதிக்கு கொண்டு வரப்பட்டு, தற்போது வழிபாட்டில் இருந்து வருகிறது.

இதுகுறித்து, பேராசிரியர் வெங்கடேஸ்வரன் கூறியதாவது: கடந்த, 20 ஆண்டுகளுக்கு முன், ராமகிருஷ்ணம்பதியை சேர்ந்த மணி என்பவர் நாக்பூரில் பணிபுரிந்தார். அங்கு புறநகர் பகுதி ஆற்றங்கரையோரத்தில், கேட்பாரற்று கிடந்த அந்த சிலையை மீட்டெடுத்து, நாக்பூரில் உள்ள தன் வீட்டில் வைத்து, வழிபாடு செய்து வந்தார். பின், தமிழகம் திரும்பும்போது அதை விட்டு வர மனமில்லாமல், தன் சொந்த ஊரான ராமகிருஷ்ணம்பதிக்கு கொண்டு வந்து, ஏற்கனவே இருந்த நடுகல்லுக்கு நடுவில் வைத்து, ஊர் மக்கள் வழிபட ஏற்பாடு செய்துள்ளார். இந்த சிலை, 1,100 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. கி.பி., ஒன்பதாம் நூற்றாண்டை சேர்ந்தது. இந்த சிலை, 2.5 அடி உயரம் கொண்ட கருங்கல்லில், புடைப்பு சிற்பமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது, வடஇந்திய கலைப்பாணியில் அமைந்த சமண முனிவர் என்பதும், அது சமண சமயத்தின் முதல் தீர்த்தங்கரரான ஆதிநாதரின் சிலை என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இவர், ஆதிநாதர் என்றும் ரிஷபதேவர் என்றும் அழைக்கப்படுகிறார். காளை இவருடைய சின்னமாகும். இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று மாலையில் பிரதமர் மோடி சுவாமி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் 69வது மடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், எட்டாவது வார்ஷிக ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் இன்று நடந்த திருக்கல்யாண வைபவத்தில், திரளான பக்தர்கள் ... மேலும்
 
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு, கடலை ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த திருவெண்காடு கிராமத்தில் தேவாரப் பாடல் பெற்ற பிரம்ம ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar