Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நாகப்பட்டினம் வேளாங்கண்ணி திருவிழா ... பழநியில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புதுச்சேரியில் 200 விநாயகர் சிலைகள் கடலில் விஜர்சனம்
எழுத்தின் அளவு:
புதுச்சேரியில் 200 விநாயகர் சிலைகள் கடலில் விஜர்சனம்

பதிவு செய்த நாள்

30 ஆக
2017
12:08

புதுச்சேரி: புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜிக்கப்பட்ட விநாயகர் சிலைகள், நேற்று மேளம் தாளம் முழங்க  ஊர்வலமாக எடுத்துச்  செல்லப்பட்டு,  கடலில் விஜர்சனம் செய்யப்பட்டது. புதுச்சேரியில்  விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 25ம் தேதி  கோலாகலமாக கொண்டாடப்பட்டது. குடியிருப்போர் நல்வாழ்வு  சங்கங்கள்,   பொதுநல அமைப்புகள் சார்பில் பல்வேறு இடங்களில் பெரிய அளவில் விநாயகர்   சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது.

ஐந்தாம் நாளான நேற்று, இந்து முன்னணி, விநாயகர் சதுர்த்தி  பேரவை சார்பில் விநாயகர் சிலைகள் கரைப்பு ஊர்வலம் சாரம் அவ்வை திடலில்  துவங்கியது. காமராஜர் சாலை, நேரு வீதி, காந்தி வீதி, பட்டேல் சாலை,  பழைய சாராய ஆலை வழியாக கடற்கரைக்கு மேளதாளம், ஆட்டம் பாட்டத்துடன் ஊர்வலமாக விநாயகர் சிலைகள்  கொண்டு வரப்பட்டன. இரவு 7:00 மணியளவில் கடற்கரை சாலை பழைய கோர்ட் அருகே ஊர்வலம் வந்தடைந்தது. அங்கு, ராட்சத கிரேன் மூலம் பெரிய அளவிலான விநாயகர்   சிலைகள் கடலில் விஜர்சனம் செய்யப்பட்டன. 200க்கும் மேற்பட்ட பெரிய விநாயகர்  சிலைகளும், இரண்டாயிரத்திற்கும் அதிகமான சிறிய சிலைகள் கரைக்கப்பட்டன. சிலைகளை கடலுக்கு கொண்டு செல்ல,கடற்கரை பகுதியில் மணல் கொட்டி வழி ஏற்படுத்தப்பட்டிருந்தது. பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. விநாயகர் சிலை ஊர்வலத்தையொட்டி, போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்து.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மார்கழியின் கடைசி நாளில் போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. “பழையன கழிதலும் புதியன புகுதலும்” என்பது ... மேலும்
 
temple news
கோவை; மார்கழி மாதம் ஏகாதசி திதியை முன்னிட்டு கோவை, உக்கடம் பூமி நீளா சமேத கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,  தஞ்சாவூர் பெரிய கோவில் வளாக தரையில், மழைநீர் தேங்காத வகையில், இந்திய தொல்லியல் துறை ... மேலும்
 
temple news
உத்தரபிரதேசம்,ஏகாதசி மற்றும் மகர சங்கராந்தியை முன்னிட்டு, பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் புனித ... மேலும்
 
temple news
உடுமலை: சோமவாரப்பட்டி ஆல்கொண்டமால் கோவில் திருவிழா வரும் 16ம் தேதி சிறப்பு அலங்கார பூஜையுடன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar