Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வாசற்படியில் உள்பக்கம் நின்று, பணம் ... இதோ ஒரு அழகிய பதில்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
பிறந்த கதை அறிவோமோ!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 செப்
2017
05:09

திரைப்படத் தயாரிப்பாளர் சாண்டோ சின்னப்பா தேவரும் கவியரசர் கண்ணதாசனும் சென்ற கார் விபத்துக்குள்ளாகி விட்டது. தேவருக்கு சிறிய காயம். கண்ணதாசன் கவலைக்கிடமான நிலையில் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். அவர் அப்போது நாத்திகர். மகாபெரியவர் மேல் பக்தியுடையவர் தேவர். அவரைத் தரிசித்து, விஷயத்தைச் சொன்னார். கண்ணதாசனுக்கு ரொம்ப அடிபட்டிருக்கிறதோ? என அக்கறையோடு விசாரித்தார் பெரியவர். கவிஞர் மீது அவர் காட்டிய கருணை, தேவர் மனத்தை உருக்கியது. திருநீறு கொடுத்த சுவாமிகள், இதைக் கண்ணதாசன் நெற்றியில் இட்டுவிடு! என்றார். கண்ணதாசன் நாத்திகராயிற்றே? தேவருக்குத் தயக்கம். பெரியவர் நகைத்தவாறே, அவன் நாட்டுக்கோட்டை செட்டியார் இல்லையா? சூரியனைச் சிலநேரம் மேகம் மறைப்பது போல் அவன் மனத்தை மறைத்திருந்த நாத்திக மேகம் இனி விலகி விடும். அவர்கள் குலம் ஆன்மிகத் திருப்பணிக்கென்றே தங்களை அர்ப்பணித்து கொண்ட குலம். வரதராஜப் பெருமாள் கோயில் திருப்பணியைச் செய்தவர்

கண்ணதாசனின் கொள்ளுத் தாத்தா. காமாட்சி கோயில் திருப்பணியைச் செய்தவர் அவன் அப்பா. தயங்காதே... நான் சொன்னபடி செய்! என்றார் சுவாமிகளின் உத்தரவை தேவர் சிரமேற்கொண்டார். மருத்துவமனை சென்று நினைவில்லாதிருந்த கண்ணதாசன் நெற்றியில் திருநீறு இட்டுவிட்டார்.  சிறிதுநேரத்தில் நினைவு வந்த கண்ணதாசன், தான் எப்படி இருக்கிறேன் என்று பார்ப்பதற்காக தேவரிடம் முகம்பார்க்கும் கண்ணாடி கேட்டார். தேவர் தயங்கியவாறே கண்ணாடியைக் காண்பித்தார். நெற்றியில் திருநீறு! தேவர் கண்ணதாசனிடம் நடந்தவற்றைச் சொன்னார். கவிஞர் கண்களில் கண்ணீர் தளும்பியது.  சுவாமிகளின் அருள்தான் தன்னைக் காப்பாற்றியது என்பதை அவர் உள்ளம் உணர்ந்தது. ஆத்திகராக மாறினார் கண்ணதாசன்.  குணமானவுடன், பெரியவரைப் பற்றிய கவிதையோடு அவரைப் போய்ப் பார்த்தார்:

பார்த்த மாத்திரத்தில் பாவத்தை அலம்புகின்ற தீர்த்தப் பெருக்கு, திரு வாசகத்தின் உட்கருத்து... கலிமொய்க்கும் இவ்வுலகைக் காக்கவந்த கண்கண்ட தெய்வம்... கவிதையைக் கேட்ட சுவாமிகள், இந்த புகழ்ச்சியெல்லாம் திருவண்ணாமலை சேஷாத்ரி ரப்பிரும்மத்திற்கல்லவோ பொருந்தும்! என்றார். அழகான உன் தமிழில், இந்து மதத்தின் பெருமைகள் பற்றி எழுது! எனக் கூறினார். அப்படி சுவாமிகளின் அருளாசியை பெற்று எழுதப்பட்ட நூல்தான் அர்த்தமுள்ள இந்துமதம். இத்தகைய உயர்ந்த ஆன்மிக நூலை எழுதிய நீங்கள் ஒரு காலத்தில் நாத்திகராக இருந்தீர்களே! என ஓர் அன்பர் பின்னாளில் கேட்டபோது, கண்ணதாசன் சொன்ன பதில் என்ன தெரியுமா? நான் நாத்திகனாக இருந்ததும் இறைவனின் சித்தமல்லாமல் வேறென்ன! எல்லாவற்றையும் இறைவனின் சித்தமாக பார்க்கும் பக்குவத்தை மகா பெரியவரின் அருள் அவரிடம் ஏற்படுத்தி விட்டது. - திருப்பூர் கிருஷ்ணன்

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
* சிவபெருமான் தன் இடப்பாகத்தை பார்வதிக்கு அளித்த தலம் திருவண்ணாமலை.  * கார்த்திகை தீபத்தன்று ... மேலும்
 

சூரியனை சுட்டவர் டிசம்பர் 03,2025

திருவண்ணாமலையை வலம் வருவது குறித்து தேவர்கள் பெருமையாகப் பேசினர். ஆனால் சூரியபகவான் ... மேலும்
 

சிவனும் முருகனே டிசம்பர் 03,2025

யாராலும் அணுக முடியாத மலை அண்ணாமலை. தேவர்களாலும் அறிய முடியாத பரம்பொருள் சிவபெருமான். ஆனால் பக்தர்கள் ... மேலும்
 
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், கம்பத்து இளையனார் சன்னதிக்குத் தெற்கே சிவகங்கை தீர்த்தம், ... மேலும்
 
அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகைத் திருவிழாவும், பங்குனி உத்திரத் திருவிழாவும் ராஜேந்திரச்சோழன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar